ஜிஹாத்! ஜிஹாத்!! ஜிஹாத்!!!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
புதிய சவாலையும் ஏற்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்களுக்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. உங்களால் பொறுப்பு வழங்கப்பட்டவர்களுக்கு நான் பல விமர்சன கடிதங்கள் எழுதி இருக்கிறேன். 2001 மே மாதத்தில் நான் எழுதிய குற்றச் சாட்டுக் கடிதங்களுக்குப் பதில் போட முடியாமல் பதில் போட வேண்டாம் என்று கட்டளை இட்டு விட்டீர்கள். இப்படி கட்டளை இட்ட நீங்கள், எனது கடிதம் ஏற்படுத்திய விழிப்புணர்வை சமாளிக்க அவதூறு நோட்டீஸ்களும் அறிக்கைகளும் செட்டப் சி.டி.யும் 2002 ல் எழுதி 2001 தேதியிட்ட செட்டப் கடிதங்களுமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்த கடிதத்திற்கு உங்களால் எந்த பதிலும் தர முடியவில்லை.
எனது பிரசுரங்களைப் படித்தால் உங்கள் சாயம் வெளுத்து விடும். எனவே உங்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவிகளிடம் அதைப் படிக்காதீர்கள் என்று கூறி வருகிறீர்கள். ஒற்றுமைக்கு முயற்சி செய்வது போல் கடிதம் ஒன்றை வெளியிடச் செய்து, அது பற்றி பரபரப்பாகவும் பேசச் செய்துள்ளீர்கள். பொறுப்பான விஷயங்களை உங்களுக்கு எழுதினால் நான் பொறுப்பில் இல்லை என்று தட்டி கழித்து விடுவீர்கள். அதனால்தான் உங்களால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு எழுதினேன். அவர்கள் உங்கள் கட்டளைக்குக் கட்டுப்பட்டு இருந்துவிட்டார்கள். இறுதி முயற்சியாக 06.04.2002.ல் ஒரிஜினல் தலைவரான உங்களுக்கே எழுதினேன். பதில் இல்லை. காரணம் அந்த கடிதத்திற்கு உங்களால் எந்த பதிலும்; தர முடியவில்லை.

தக்க சான்றுகளுடன் வேண்டாம் சாதாரணமான பதிலாவது இருந்ததா?
அதனால் 06.04.2002ல் நான் எழுதிய கடிதத்தில் உள்ள குற்றச் சாட்டுகளுக்குப் பதில் என்று 2 வீடியோக்களை கலைக்கப்பட்ட துபை ஐ.ஏ.ஸி. கிளைத் தலைவர் பனைக்குளம் ஷhகுல் மூலம் வெளியிட்டீர்கள். முன்னதாக என்றும் எழுதி இருந்தேன்.
கிளைமாக்ஸில் கூறப்படுவதே உண்மை நிலை.
எனவே இந்த கடிதத்தின் மூலம் நீங்கள் கூறிய ராஜினாமாவுக்கான உண்மைக் காரணத்தை. நீங்கள் கொடுத்த வாக்கு மூலத்தைத் தருகிறேன். முன்னதாக விளங்குவதற்காக ஒரு பீடிகை. எந்த ஒரு பிரச்சனைக்கும் உச்ச கட்டம் - இறுதி நிலை- முடிவு என்று ஒன்று இருக்கும். இதை உங்களுடன் இருக்கும் எல்லா மவுலவிகளுக்கும்; புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் கிளைமாக்ஸ் இருக்கும். கிளைமாக்ஸை வைத்துதான் தீர்வு ஏற்படும். அதற்கு முன்னதாக சொன்னது எல்லாம் சந்தர்ப்ப வாதம் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை. கிளைமாக்ஸில் கூறப்படுவதே உண்மை நிலை. இதை எல்லோரும் அறிந்தே வைத்திருக்கிறீர்கள்.
2 வது அமர்வில் உங்களின் கிளைமாக்ஸ் உரை.
'கேஸட்டை வெளியிட்டால் எஸ்.கே. நாறிப் போய்விடுவார். அதனால் வெளியிடாதீர்கள். என்று எல்லோரும் கேட்டுக் கொண்டதால் வெளியிடாமல் இருக்கிறோம்' என்று எந்தக் கேஸட் பற்றி இப்படி பொய்யான தகவல் கூறினீர்களோ! அந்த அரிஸ்ட்டோ ஒட்டல் நிகழ்ச்சியில். லுஹர்-அஸர் தொழுகை முடிந்து, உணவுக்குப் பின் துவங்கும் 2 வது அமர்வில்; உங்களின் கிளைமாக்ஸ் உரை:-
''அன்பிற்குரிய சகோதரர்களே, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்பாளர் என்ற ரீதியிலே. அது சம்பந்தமான சில உண்மை விபரங்களை. உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்காத உண்மைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்...'' (என்று துவங்கி 1992டிசம்பர் 6 ல் இருந்து நடந்து வரும் சம்பவங்களை கூறிவிட்டு.) ''இதற்கு ஒரு தீர்வு காணணும் இதற்கு பல வகையிலே முயற்சிகள் பண்ணனும் அப்படிங்க மாதிரி கருத்துகள் இருந்திச்சு... சில காரியஞ் செய்வதற்காக வேண்டி அதுக்காகத்தான் நான் ஜாக் ஷ_ரா விலிருந்து கூட ரிஸைன் பண்ணினேன்.
எனக்கு ஏற்படுகிற சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு வரக்கூடாது. என்ன காரியம்னு இதிலே இருந்தே. விளங்கிக்கிடும். அது வந்துடக் கூடாதுங்கிறதுக்கு வேண்டியே நான் ஜாக்குடைய ஷ_ராவில் இருக்க மாட்டேன். நான் சில சமுதாய பாதுகாப்புகளுக்காக வேண்டி சில ஏற்பாடுகள் பண்ணனும். அதனால இதிலே எந்த நிர்வாகப் பொறுப்பும் வேண்டாம்னு சொல்லி. அதனாலே தான் வேறு ஒரு காரணத்துக்கும் ஜாக் ஷ_ரா விலிருந்து ரிஸைன் பண்ணவில்லை. எல்லோருக்கும் தெரியும். காரணத்தோடுதான் நாம ரிஸைன் பண்ணினோம்.''
(எல்லோருக்கும் தெரியும் என்பதில் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட இன்று கூட்டமைப்பில் உள்ள பழைய மவுலவிகள் எல்லோரும் அடங்குவார்கள்.)
''சில காரியங்கள் சமூக பாதுகாப்புக்குள்ள ஏற்பாடுகளையும் இன்னைக்கும் நாளைக்கும் நாம செஞ்சிருக்கிறோம்... என்னது செய்கிறோம்ன்னுட்டு எஸ்.கே.க்கு தெரியாது. ஆனால் அதுக்காகத்தான் விலகுகிறேங்குறது சொல்லிட்டு செஞ்சிருக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இங்கு வரவே இல்லை.'' (எந்த கருத்து வேறுபாடும் இங்கு வரவே இல்லை. என்று கூறிய நீங்களும் இப்பொழுது உங்களுடன் இருப்பவர்களும் இதே நிகழ்ச்சியில் உங்களை காத்துக் கொள்ள உருவான அணியால்தான் பிரச்சனை என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.)
''ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை. இன்னைக்கு அந்த நிலை வேலை விலகிடுச்சு. அன்னைக்கு என்ன மாதிரி வேண்டும்னாலும் கவ்ர்மெண்ட் செய்யலாம். நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்... இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்.
அப்ப அந்த மாதிரி ஒரு ஆபத்துகள் இருந்ததுனாலே நம்ம அமைப்பு தவ்ஹீது உடைய வளர்ச்சியும் சேர்த்து கெடுக்கிற மாதிரி. நமக்கு வரக் கூடிய ஆபத்து. தவ்ஹீதுக்கும் சேர்ந்து வந்துடக்கூடாதுங்கிற அக்கரை... அதாவது தெரியாம நம்ம வந்து ஜாக்குடைய கலர்லேயே அதைச் செஞ்சோம்னு சொன்னா. என்ன செய்வான் நம்மளக்கு போடக்கூடிய தடை ஜாக்குக்கும் வரும். மர்க்கஸ் மூடப்படும்... ... இந்த செய்தி யெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது...
கோஸ்டியாக சேர்ந்து பொய் சத்தியமும் செய்து வருகிறீர்கள்.
இப்படி தொடரும் உங்கள் வாக்குமூல உரையில் ஜாக்கிலிருந்து விலகியதற்கான உண்மைக் காரணத்தைக் கூறியுள்ளீர்கள். உண்மைக் காரணம் இவ்வாறு இருக்கவே உங்கள் சுய நலனுக்காக இப்பொழுது வேறு காரணங்களை உண்டு பண்ணி கூறுகிறீர்கள். இதை பொது மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வைப் பற்றி கொஞ்சம் கூட பயப்படாமல் கோஷ;டியாக சேர்ந்து பொய் சத்தியமும் செய்து வருகிறீர்கள்.
ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால், இந்த உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். பொய்களை பரப்பியதற்காக நீங்களும் கூட்டமைப்பு மவுலவிகளும் சம்பந்தப் பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலே சுட்டிக் காட்டி உள்ள வாக்கு மூலத்தைப் பொய் என்று வாதித்தால் உங்களையும் இதை மறுக்கும் கூட்டமைப்பு மவுலவிகளையும் நீங்கள் விடுத்துள்ள சவால்படி நிரூபிக்க நான் தயார்.
பாருங்கள் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லி எங்களை மாட்டி விடப் பார்க்கிறார் என்று திசை திருப்பக் கூடாது.
1 .உங்கள் சவாலை ஏற்றுத்தான் இந்த பதில்.
2. என்னதான் ஆதாரங்களுடன் நிரூபித்தாலும் நீங்களே ஒப்புக் கொண்டாலும் காவல் துறையின் கையாளாக ஆகி விட்ட உங்களை எந்த அரசு வந்தாலும் ஒன்றும் செய்யாது. இந்த அந்தரங்கத்தை நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். எனவே இது மாட்டி விடும் நோக்கத்தில் கூறவில்லை. ஒற்றுமை ஏற்படக் கூறும் சரியான வழியாகும்.
ஜிஹாதின் பெயரால் சூழ்ச்சி செய்து, திசை திருப்ப முயற்சி செய்துள்ளான்.
உலகத்திலேயே நம்பர் ஒன் தவ்ஹீது ஜமாஅத் தமிழகத்தில் உருவாகிக் கொண்டு இருந்தது. குர்ஆன் ஹதீஸ்களை மிகத் தெளிவாக ஆராய்ச்சி செய்யக் கூடிய நல்ல நிலை உருவாகி தூய இஸ்லாம் பரவிக் கொண்டிருந்தது. இன்றைய உலகத்திற்கே முன் மாதிரி ஜமாஅத் தமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டிருந்தது. இதை பிடிக்காத ஷய்த்தான், இவர்களை இஸ்லாத்திலிருந்து வேறு வழியில் திசை திருப்ப முடியாது என்று எண்ணிய ஷய்த்தான். ஜிஹாதின் பெயரால் சூழ்ச்சி செய்து, திசை திருப்ப முயற்சி செய்துள்ளான்.
தவ்ஹீது பணி முடங்கியது தவ்ஹீது வாதிகள் திசை திருப்பப்பட்டார்கள்.
1980லேயே சிலர் ஜிஹாதுப் பற்றி பேசினர். மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது யாரும் பின்னால் போகவில்லை. இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொருவர் மூலமும் ஜிஹாது பற்றி பேச வைத்து முஸ்லிம்களை திசை திருப்ப ஷய்த்தான் முயற்சி பண்னினான். அவன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. கடைசியில் யாரைப் பிடித்தால் முடியுமா அவரை பிடித்தான் அதாவது பி.ஜெய்னுல் ஆப்தீன் ஆகிய உங்களைப் பிடித்தான். தவ்ஹீது பணி முடங்கியது தவ்ஹீது வாதிகள் திசை திருப்பப்பட்டார்கள்.
இந்திய ராணும் நம் முன் நூலாம் பூச்சிகள் என்று பேசினார்கள்.
உங்கள் வாக்கு மூலப்படி செயல்பட்ட நீங்கள் சில காலம் கோவை பாஷh என்றீர்கள். பிறகு இமாம் அலி என்றீர்கள், ராஜா உசேன் என்றீர்கள். இப்படி கிதாப் வியாபாரத்தைத் துவங்கிய கண்ணியத்திற்குரிய பி.ஜே அவர்களே! நீங்களும் சாது ஷம்சுல்-லுஹாவும் மற்றும் உங்களைச் சார்ந்த மவுலவிகளும் 1997-முடிய ஜிஹாத்! ஜிஹாத்!! என்று எப்படியெல்லாம் வெறி ஊட்டிப் பேசினீர்கள். 'எத்தனை காலத்திற்குத்தான் மக்கா வாழ்க்கை! மக்கா வாழ்க்கை!! என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள். ரசூல்(ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கை இல்லையா?' என்று பத்ரு, உஹது போர் வரலாற்றைக் கூறினீர்கள். தன் நிழலைக் கண்டு பயப்படக் கூடிய பூலி காஜா போன்றவர்களெல்லாம் இந்திய ராணும் என்ன செய்யும் இந்திய ராணும் நம் முன் நூலாம் பூச்சிகள் என்று பேசினார்கள்.
அறிமுகம் செய்தீர்கள், செயல்படுத்தவும் செய்தீர்கள்.
இப்பொழுது எதை முட்டாள்தனமான செயல் பகிரங்கமாக என்று விமர்சிக்கிறீர்களோ! அந்த முட்டாள்தனமான செயல் உங்கள் மூலையில் உருவானதுதான். இதை உங்கள் உரைகளைக் கொண்டே நிரூபிக்கத் தயார். அந்த முட்டாள்தனமான செயலை அன்று மார்க்கம் என்று பகிரங்கமாக போதித்தீர்கள். இன்று ரகசியமாக போதிக்கிறீர்கள். 'ரகசியப் பேச்சு, ரகசிய பயிற்சி, ஆட்களை தேர்வு செய்தல் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை என்று இன்று பகிரங்கமாக பிரச்சாரம்; செய்யும் நீங்கள்தான் அன்று இதை அறிமுகம் செய்தீர்கள், செயல்படுத்தவும் செய்தீர்கள்.
வழக்குகளிலிருந்து தப்பி விடுபட்டு உல்லாசமாக உலவி வருகிறீர்கள்.
எந்த ஆயத்து ஹதீஸ்களைக் கூறி ஜிஹாது தனி நபர் மீது கடமை இல்லை. அரசாங்கத்தின் மீதுதான் கடமை என்று இன்று பிரச்சாரம் செய்கிறீர்களோ, அதே ஆயத்து ஹதீஸ்களைக் கூறித்தான் தனி நபர்கள் மீது ஜிஹாது கடமை என்பது போல் உங்கள் அணி அன்று பிரச்சாரம் செய்தது. சிறையில் உள்ளவர்களைக் காண வரும் உறவினர்கள் நமக்கு ஏன் இந்த கதி என்று அழும் போது அவர்கள், இதற்கு மூல காரணம் உங்களைப் போன்றவர்களின் பேச்சுதான் என்று கூறுகின்றனர். உங்களிடமுள்ள பண செல்வாக்காலும் உங்கள் பின் நிற்கும் உண்மை என்னவென்று தெரியாத மக்கள் செல்வாக்காலும் அதிகாரிகளிடம் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளாலும் எல்லோரும் வழக்குகளிலிருந்து தப்பி விடுபட்டு உல்லாசமாக உலவி வருகிறீர்கள்.
அவனிடம் மறுக்க முடியாது! அவன் மறக்கவும் மாட்டான்!
இன்று இந்த உலகில் கூறிய மாதிரி மறுமையில் அந்த நாளின் அதிபதியிடம் முறையிட மாட்டார்களா? நீங்கள் மேடையிலும் குஸீஸி கஸ்த்திலும் கூறிய கொள்கையிலிருந்து மாறி விட்டதை அதே மாதிரி கூறினீர்களா? என்று கேட்க மாட்டானா? எங்கோ ஒருத்தி விபச்சாரம் பண்ணினால் அதற்காக எங்கோ ஒருத்தன் வாங்கிய வரதட்சனைக்காக கேட்கப் படுவான் என்கிறீர்களே! உங்களை அல்லாஹ் கேட்க மாட்டானா? அந்த அல்லாஹ்வின் பிடி கடுமையானது. அவனிடம் மறுக்க முடியாது! அவன் மறக்கவும் மாட்டான்!
இன்னும் ஒரு படி முன்னேறி சிந்தித்துப் பாருங்கள்.
1997-முடிய குர்ஆனில் ஜிஹாத் பற்றிய வசனங்கள் மட்டுமே இருப்பதுபோல் ஜிஹாத்! ஜிஹாத்!! என்று உங்கள் அணியின் மைக் மாவீரர்கள் பேசினார்கள். 1998-க்குப் பிறகு ஜிஹாத் வசனங்கள் குர்ஆனிலிருந்து எடுக்கப்பட்டு விட்ட மாதிரி ஜிஹாத் வசனங்களை மறந்து விட்டார்கள் என்று கூறும் அளவில் ஆகிவிட்டதுடன் அபிஸீனிய-வாழ்கை! வாழ்வதாக அறிவித்து விட்டீர்கள். 1997 வரை உங்களைப் போன்றவர்கள் வெறியூட்டிப் பேசிய, மைக்கைக் கண்டால் வரும் வீர உரைகளால் மட்டு மல்ல. நீங்கள் செய்த குஸீஸி கஸ்த்துக்களால் மட்டுமல்ல இன்னும் ஒரு படி முன்னேறி சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களெல்லாம் நக்கல் பண்ணும் நிலை.
ஆக உங்களால்தான் கோவை முதல் மேலப்பாளையம் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளானார்கள். தமிழகம் முழுவதும் ஆயிராக் கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் கோர்ட்டு ஜெயில் என்று அலைந்து கொண்டிருக்கின்றன. பல முஸ்லிம் பெண்கள் விதவைகளாக ஆகி இருக்கிறார்கள். திருமணமான 10 நாளில், ஒரு வாரத்தில் கணவனை இழந்த பெண், கணவனை சிறையில் காண வேண்டிய நிலைக்கு ஆளான பெண் இன்னும் சொல்லப் போனால் 'ஜிஹாது' என்று போனவன் ஜெயிலில் ... இப்படி உள்ளான், 'ஜிஹாது' என்று போனவனின் மனைவிகளெல்லாம் ... ஆகிவிட்டார்கள் என்று கூறி நீங்களெல்லாம் நக்கல் பண்ணும் நிலை.
நீங்களும் உங்கள் அணி மைக் மாவீரர்களும் ஆற்றிய வீர உரைதானே காரணம்.
பிள்ளையை இழந்த வயதான தாய்மார்கள், அண்ணனை இழந்த தங்கைகள், தந்தையை இழந்த பிள்ளைகள், கர்ப்பத்திலேயே தந்தையை இழந்த பச்சிளங் குழந்தைகள்! எத்தனையோ வயதான பெற்றோர்களின் பிள்ளைகள் சிறையில் இருக்க, தள்ளாடும் நிலையில் இவர்கள் நடு ரோட்டிலும் தெருத் தெருவாகவும் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகி விட்டார்கள். வரதட்சனைப் பேய் ஆட்டிப் படைக்கும் இந்த உலகில் வாழ வைப்பான் அண்ணன் என்று திருமணத்திற்காக காத்திருந்த தங்கை அண்ணனைக் காண ஜெயில் வாசலில் காத்துக் கிடக்கிறதே. இதற்கெல்லாம் நீங்களும் உங்கள் அணி மைக் மாவீரர்களும் ஆற்றிய வீர உரைதானே காரணம்.
வாக்குறுதி அளித்தவர்கள் மறுக்கலாம், மறக்கலாம்.
உலக அளவில் ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், இந்திய அளவில், இப்பொழுது குஜராத். இங்கு நடந்தவை, நடப்பவை கொடூரம்! அநியாயம்!! ஆகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவனும் என்கிறீர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவனும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உங்களால் தூண்டி விடப்பட்டு நேரடி பாதிப்புக்கு ஆளானவர்களை 'அம்போ' என விட்டு விட்டு, எங்கோ யாராலோ நடந்த கொடுமைக்கு உதவுவதன் மூலம் உலக மக்களிடம்தான் நற்பெயரை தட்டிச் செல்ல முடியும். அல்லாஹ்விடம் முடியுமா? 'உதவுவோம்' என்று வாக்குறுதி அளித்ததை, வாக்குறுதி அளித்தவர்கள் மறுக்கலாம், மறக்கலாம். ஆனால், அந்த அல்லாஹ்வின் பிடி கடுமையானது. அவனிடம் மறுக்க முடியாது! அவன் மறக்கவும் மாட்டான்!
நீங்கள் கண்டு பிடித்த ஒரே ஆயுதம் மோசடி குற்றச்சாட்டுக்கள்தான்.
ஜாக்கிலிருந்து வெளியேறியதற்குரிய உண்மையான காரணத்தை உங்கள் வாக்கு மூலத்தை வெளியிட்டால் உங்கள் வண்டவாலம் தண்டவாளத்தில் ஏறி விடும். செல்லாக்காசு ஆகி விடுவீர்கள். இதற்கு பயந்த நீங்கள் எனது சொல் எடுபடாமல் போக வழக்கமான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் யாரை எதிர் கொள்ள நேரிட்டாலும், யாரையும் எதிர்க்க எண்ணினாலும், எதிர் தரப்பை வீழ்த்த நீங்கள் கண்டு பிடித்த ஒரே ஆயுதம் மோசடி குற்றச்சாட்டுக்கள்தான்.
உங்கள் பினாமி பக்ரியைக் கொண்டு ஒற்றுமைக் கடித நாடகம் போட்டுள்ளீர்கள்.
உங்கள் வாக்கு மூலத்தை வெளியிட்டால் அது எடுபடாமல் போக வேண்டும் என்பதற்காக, அற்பமான நாற்காலிக்கு ஆசைப்பட்ட கூலிப்படைகளை அணி சேர்த்துக் கொண்டு என் மீது மோசடிக் குற்றச்சாட்டை அரங்கேற்றியுள்ளீர்கள். இருந்தாலும் ஊர்ப் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் உங்கள் தலைமையிலான கூட்டத்தை மக்கள் அடையாளம் காணத் துவங்கி விட்டார்கள். இதை உணர்ந்த நீங்கள் உங்கள் பினாமி பக்ரியைக் கொண்டு ஒற்றுமைக் கடித நாடகம் போட்டுள்ளீர்கள்.
மோசடி பண்ணி விட்டார் பழனி பாபா.
இதே மாதிரி, உங்கள் சுய நலத்திற்காக தவ்ஹீதுப் பிரச்சாரத்திற்கு குட் பை சொல்ல எண்ணி, சமுதாய எழுச்சிப் பேச்சுக்களை பேசத் துவங்கினீர்கள். உங்களுக்கு முன்பாகவே சமுதாய விழிப்புணர்வு உரைகளை ஆற்றி முஸ்லிம் இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்து விட்ட பழனி பாபாவை வீழ்த்த வைத்த குற்றச்சாட்டும் மோசடிதான். சிறைவாசிகளுக்கு உதவுவதாகக் கூறி வசூல் செய்து மோசடி பண்ணி விட்டார் பழனி பாபா என்று செய்திகளைப் பரவச் செய்தீர்கள்.
இன்று அதன் பலனை அனுபவித்து வருகிறார்கள்.
உங்கள் சுய நலனுக்காக தவ்ஹீது ஜமாஅத்தை பல பிரிவுகளாக ஆக்கியதுபோல் சிறையில் ஒற்றுமையாக இருந்த சிறைவாசிகளைப் பிரித்தீர்கள். சிறைவாசிகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி பழனி பாபா உதவவில்லை பி.ஜே.தான் உதவுகிறார் என்று எழுதி வாங்கி பல காப்பிகளாக ஆக்கி வினியோகித்தீர்கள், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்தீர்கள். சிறைவாசிகளுக்கு உதவுகிறீர்கள் என்பதால் சமுதாயத்தின் ஆதரவை விரைவாகப் பெற்றீர்கள். மேடை தோறும் சிறைவாசிகளுக்காக குரல் கொடுத்ததால் வளர்ந்தீர்கள். உங்கள் வார்த்தைகளை நம்பி, உங்கள் விருப்பப்படி பழனி பாபாவை குறை கூறியும் உங்களைப் புகழ்ந்தும் எழுதி தந்தவர்கள் இன்று அதன் பலனை அனுபவித்து வருகிறார்கள்.
பழனி பாபா அவன் ஒழுக்கங்கெட்டவன் இஸ்லாமிய வாழ்க்கையே கிடையாது.
பழனி பாபா உயிருடன் இருக்கும்போது அவருக்கு எதிராக பத்வா கொடுத்ததை லுஹா மூலம் அறிந்தேன். அவர் கொல்லப்பட்டதும் ஷஹீது என்று அழுதீர்கள். ஒருவரது வெளி வாழ்க்கையை வைத்துதான் ஷஹீது என்று கூற முடியும் என்று காரணமும் கூறினீர்கள். இப்படி புகழ்ந்ததிலாவது உறுதியுடன் நின்றீர்களா? அவர் மரணித்த சில மாதங்களுக்குப் பின் பழனி பாபா அவன் ஒழுக்கங்கெட்டவன் இஸ்லாமிய வாழ்க்கையே கிடையாது என்று சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு உங்கள் சுய நலனுக்காக தரம் தாழ்த்தியும் பேசினீர்கள். இதுதான் உங்கள் நிலை.
உலக மக்கள் ஆதரவை நாடி நிற்பவர்களுக்கு அறிவுரைக் கடிதங்கள் பயன் தராது.
உங்களால் அநியாயமாக விமர்சிக்கப்பட்டவர்களில் இம்தாதியும் ஒருவர். அவர் உங்களை கண்டித்து விமர்சனக் கடிதம் எழுதிடவும், உங்களை அடையாளம் காட்டிடும் விளக்கப் பிரசுரங்கள் வெயியிடவும்; அவருக்கு உரிமை இருக்கிறது. இருப்பினும் பொறுமையை மேற்கொண்டு அறிவுரைக் கடிதங்கள் அனுப்பி உள்ளார். அறிவுரைக் கடிதங்கள் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களுக்கு மட்டுமே பயன் தரும். உலக மக்கள் ஆதரவை நாடி நிற்பவர்களுக்கு அறிவுரைக் கடிதங்கள் பயன் தராது. எனவே உங்களை அடையாளம் காட்டிடும் விமர்சனக் கடிதமோ, விளக்கக் கடிதமோதான் அவர் உங்களுக்கு எழுதி இருக்க வேண்டும்.
பிரச்சனையை திசை திருப்பி பயன் அடைந்து வருகின்றீர்கள்.
மனிதன் சூழ்நிலையின் கைதி. இதற்கு நீங்கள் விதி விலக்கல்ல. ஹதீஸ் அறிவிப்பாளர்களிடம் ஹதீஸ் கலை நிபுணர்களிடம். ஹதீஸ் தொகுப்பாளர்கள் புகாரி. முஸ்லிம் போன்ற இமாம்களிடம் மட்டுமல்ல, 4 இமாம்கள்; என்று பிரதானமான கூறப்படுபவர்களிடமும் குறைகள் தவறுகள் இருக்கும் என்று உங்கள் ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். ஏன் நபிமார்களிடமும் தவறுகள் இருக்கும் என்று நம்பும் அவர்கள் உங்களிடம்; உள்ள குறைகள், தவறுகள், முரண்பாடுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையிலும் ஜீரணிக்க முடியாதவர்களாகவே உள்ளனர். இதை பதவி ஆசை பிடித்த நீங்களும் மற்றுமுள்ள சில சந்தர்ப்பவாதிகளும் புகுந்து விளையாடி ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரச்சனையை திசை திருப்பி பயன் அடைந்து வருகின்றீர்கள்.
உடைந்துச் சிதறி சின்னாப் பிண்ணாமாகி வருகிறது.
மார்க்கத்தை தூய்மையாக அறிய வேண்டும் எனில், ஹதீஸ் அறிவிப்பாளர்களின் அறிவிப்பை மட்டும் பார்க்காமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆராய வேண்டும் என்று கொள்கை உடையவர்கள். உங்களின் தராதரத்தை மட்டும் மூடி மறைக்க வேண்டும் என்ற கொள்கையில் இருக்கிறார்கள். இந்தத் தவரான கொள்கையில் கடந்த காலத்தில் நானும் இருந்துவிட்டேன். இதனால்தான் வளரும் நமது தவ்ஹீது ஜமாஅத் அதன் பயனை அடைய முடியாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களால் உடைந்துச் சிதறி சின்னாப் பிண்ணாமாகி வருகிறது.
தவ்ஹீதின் வீழ்ச்சிக்கு உங்கள் குணம் அளித்த பங்களிப்பே கூடுதல்.
இந்த உடைப்புகளின் நாயகராக ஒவ்வொரு உடைப்பின் போதும் மூல கர்த்தாவாக இருந்து வருபவர் யார்?
அபூஅப்துல்லா - பி.ஜே.
புரட்சி மின்னல்.அப்துல்லா- பி.ஜே.
இக்பால் மதனி.- பி.ஜே.
கமாலுத்தீன் மதனி.- பி.ஜே.
மைதீன் உலவி.-பி.ஜே.
இம்தாதி -பி.ஜே.
இப்பொழுது பக்ரி -பி.ஜே.
இனி யாருடனோ? அன்ணன் பி.ஜே. அவர்களே! உடைப்பின் நாயகர் யார் என்பதை இனியும் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தவ்ஹீதின் எழுச்சிக்கு உங்கள் உரைகள் அளித்த பங்களிப்பைவிட, தவ்ஹீதின் வீழ்ச்சிக்கு உங்கள் குணம் அளித்த பங்களிப்பே கூடுதல்.
நீங்கள் என்ன சொன்னாலும் நம்பும் அளவுக்கு மக்கள் ஆகிவிட்டார்கள்.
உங்களது சுய நலத்திற்காக வாதத் திறமையைக் கொண்டு உங்கள் தரப்பை நியாயப்படுத்துவதும் எதிர் தரப்பை பொய்ப்பிப்பதும் உங்களுக்கு கை வந்த கலை. அல்லாஹ் அளித்த ஆற்றலை ஆக்கப்பணிகளுக்குப் பயன்படுத்தியதை விட அதிகமாக அழிவுப் பணிகளுக்குத்தான் பயன் படுத்தி வந்திருக்கிறீர்கள். இம்தாதியும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உங்களது முரண்பாடுகளை பேச்சுத் திறமையால் சமாளித்தீர்கள். ஏன் கண்டு கொள்ளாமல் இருந்தீர்கள் என்று அவரிடம் கேட்டேன். எப்படியோ ஒற்றுமை ஏற்பட்டால் சரி என்று இருந்தேன் என்றார். இப்படியே எல்லோரும் இருந்ததன் விளைவுதான் நீங்கள் என்ன சொன்னாலும் நம்பும் அளவுக்கு மக்கள் ஆகிவிட்டார்கள்.
மேலும் சில பொய்யைகளை அரங்கேற்றி தன்னை அடையாளம் காட்டி உள்ளார்.
இப்பொழுது சாது ஷம்சுல்-லுஹா வேறு உங்கள் கைக்கு கிடைத்துள்ளார். சாது-வுக்கு கோபம் வராது. சாது மிரளும். உலகில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத சாது எப்பொழுது மிரளும் தனக்கு பாதிப்பு என்றால்தான் மிரளும். சாதுவின் பொய் சத்தியம் அம்பலப்படுத்தப் பட்டதால் பாதிக்கப்பட்ட சாது ஷம்சுல்-லுஹா மிரண்டுள்ளார். அவரது பொய் சத்தியத்தை உண்மைபோல் காட்டிட அல்-முபீன் மூலமும் மேலும் சில பொய்யைகளை அரங்கேற்றி தன்னை அடையாளம் காட்டி உள்ளார்.
மானம், ரோஷம், சூடு, சுரணை இருந்தால் நிரூபியுங்கள்.
பொய் சத்தியம் மூலம் துபையில் இருந்து அனுப்பப்பட்ட பணங்களை பெற்று வந்த ஷம்சுல்-லுஹா அடைப்புக் குறிகளைப் பிடித்து தொங்குகிறார். அவர் உண்மையாளராக இருந்தால் இதோ, கமாலுத்தீன் மதனி ஜாக் கணக்கு என் மனைவி இடம் இருக்கு என்று சொல்லி இருக்கிறார் பாருங்கள் என்று நிரூபித்துக் காட்டி இருப்பார். லுஹா பொய்யராக இருப்பதால், நிரூபிக்க முடியாது என்பதால், வாதத் திறமையாளரான உங்கள் வழியில் என் கடிதத்தில் உள்ள வார்த்தைகளைப் பிடித்து தொங்கி உள்ளார். இந்த நிலை எதிர் அணிக்கு இருந்தால் மானம், ரோஷம், சூடு, சுரணை இருந்தால் நிரூபியுங்கள் என்று எழுதி இருப்பார்.
இதையும் நீங்கள் விடுத்துள்ள சவால்படி நிரூபிக்க நான் தயார்.
அல்-முபீனில் லுஹா சொருகி உள்ள மாதிரி நான் ஒன்றும் (சொந்தமாக) சொருகவில்லை. ''ஜம்இய்யத்து பேரில் உள்ள கொடுக்கல் வாங்கலை எழுதி வைத்து பாதுகாப்பாக வைத்து உள்ளேன். நான் சொந்தமாக கொடுக்கும் கடனை எழுதி வைப்பேன் வைக்காமலும் இருப்பேன்'' இப்படி கமாலுத்தீன் மதனி அவர்களே தெளிவாகச் சொல்லி உள்ளதற்கு உரிய ஆதாரம் இருக்கிறது. வரவு செலவு விபரங்கள் செயலாளர் பொருளாளர்களுக்குத் தெரியும் என்றும் கூறி இருக்கிறார். அதையும் வார்த்தை ஜாலங்களால் திசை திருப்பியுள்ளார் சத்தியவான் ஷம்சுல் லுஹா. இதையும் நீங்கள் விடுத்துள்ள சவால்படி நிரூபிக்க நான் தயார்.
பொருத்தமான 2 பொய்யர்களை தேர்வு செய்தீர்கள்.
முஸ்லிம் டிரஸ்ட் அரங்கில் இருந்து பசாது பேசிய நீங்கள், கமாலுத்தீன் மதனி த.மு.மு.க. பற்றி அப்படி பேசினார் இப்படி குற்றம் சாட்டி உள்ளார், என்று கூறி ஒவ்வொன்றுக்கும் கேஸட் போட்டுக் காட்டினீர்கள். அது போல் ஜாக் கணக்கு என் மனைவி இடம் இருக்கு என்று உண்மையிலேயே கமாலுத்தீன் மதனி கூறி இருந்தால் அதையும் போட்டுக் காட்டி இருப்பீர்கள். நீங்கள் கூறியது பொய் என்பதால் உங்களின் இந்தப் பொய்க்கு சாட்சி சொல்ல பொருத்தமான 2 பொய்யர்களை தேர்வு செய்தீர்கள்.
2 பொய்யர்களிடமும் பொய் சாட்சியத்தைத்தான் நீங்கள் எதிர் பார்த்தீர்கள்.
முதல் பொய் சாட்சி ஷம்சுல் லுஹா, தனக்கு சவூதியிலிருந்து வந்து கொண்டிருந்த சம்பளம் நின்றதற்கு கமாலுத்தீன் மதனிதான் காரணம் என்று எண்ணி உள்ளார். 2 வது பொய் சாட்சி எம். எஸ்.சுலைமான் பிர்தவ்ஸி, தன் சகோதரி திருமணத்திற்கு ஜாக்கில் கடன்; கேட்டு கமாலுத்தீன் மதனி கொடுக்க மறுத்து விட்டார். ஆக கமாலுத்தீன் மதனியை பழி வாங்குவதற்காக 2 பேரும் பொய்சாட்சியத்துடன் பொய் சத்தியம் செய்துள்ளனர். அந்த 2 பொய்யர்களிடமும் பொய் சாட்சியத்தைத்தான் நீங்கள் எதிர் பார்த்தீர்கள். அவர்களோ பொய் சத்தியமும் செய்து உங்களை பிரமிக்க வைத்து விட்டார்கள்.
மருத்துவத்திற்கு கேட்டு மறுத்த மாதிரி மறுத்துக் கூறி திசை திருப்பி பேசி
எம். எஸ்.சுலைமான் பிர்தவ்ஸி சகோதரி திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்கத்தான் கடன் கேட்கிறாய். அதனால் தர முடியாது என்று கமாலுத்தீன் மதனி கூறி இருக்கிறார். வரதட்சணை அண்ணன் கொடுக்கிறார் வேறு செலவுக்குத்தான் கேட்கிறேன் என்று சுலைமான் கூறி இருக்கிறார். நீ ஒரு ஷதாஇ யாக இருந்து கொண்டு உன் சகோதரிக்கு ஏன் வரதட்சணை மாப்பிள்ளைக்கு போய் மணம் முடிக்கிறாய் வரதட்சணை வாங்காத தவ்ஹீது மாப்பிள்ளை நாங்கள் பார்த்து தருகிறோம் என்று கமாலுத்தீன் மதனி கூறி இருக்கிறார். கடன் கேட்டதே கல்யாண வகைக்கு என்று சம்பந்தப்பட்ட சுலைமானே ஒப்புக்புக் கொண்டார். அதன் பிறகும் மருத்துவத்திற்கு கேட்டு மறுத்த மாதிரி மறுத்துக் கூறி திசை திருப்பி பேசி உள்ளீர்கள்.
25,000 (இருபத்தி ஐந்தாயிரம்) ரூபாயை இன்னும் நான் கொடுக்கவில்லை.
கடன் கொடுக்க மறுத்ததற்கு கூறப்படும் காரணங்களில் இன்னொன்று. உங்களைப் போல பல மவுலவிகள் ஜாக்கில் கடன் வாங்கி விட்டு திரும்பக் கொடுக்கவில்லை என்பதுதான். கடன் வாங்கி விட்டு தராத மவுலவிகள் பட்டியலை எங்கே கமாலுத்தீன் மதனி படித்து விடுவாரோ என்று பயந்த உலக மகா உத்தமராகிய நீங்கள், 1994 லேயே ஜாக் நடவடிக்கை சரியில்லை என்று வெறுத்து வெளியேறியதாக சொல்லும் .நீங்கள் திர்மிதி வெளியிட்டுத் தருகிறேன் என்று அல்-ஜன்னத்தில் வாங்கிய 25,000 (இருபத்தி ஐந்தாயிரம்) ரூபாயை இன்னும் நான் கொடுக்கவில்லை என்று 01.05.1997 தேதிய அந்த நிகழ்ச்சியில் முந்திக் கொள்கிறீர்கள். மேலும் நீங்கள் கூறி உள்ள உண்மைக்குப் புறம்பானவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மன்னிக்கவும் தெரியாத விஷயத்தைத்தான் கவனத்திற்கு கொண்டு வர முடியும். நீங்கள் சொன்ன விஷயம் என்பதால் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
எல்லோருக்கும் சாதாரணமாகப் புரியக் கூடியதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் 1994 லேயே ஜாக்கை வெறுத்து எஸ்.கே.யை எதிர்த்து ராஜினாமா செய்ததாக கூறி இருந்தீர்கள். அது எவ்வளவு பெரிய பொய் என்பதை பக்ரி கடித்தில் தெளிவாக விளக்கி இருந்தேன். எஸ்.கே.பொய் சொல்லவில்லை. நீங்கள்தான் பொய் சொல்லி உள்ளீர்கள். இதற்கு இன்னும் ஏராளமான நிகழ்வுகளை ஆதாரங்களுடன் கூற முடியும். அதிலும் குறிப்பாக பக்ரிக்கும் இன்று கூட்டமைப்பில் உள்ள மற்ற மவுலவிகளுக்கும் தெரிந்த சம்பவங்களையே நினைவூட்ட முடியும். குறிப்பாக பொது மக்களுக்கும் தெரிந்ததை எல்லோருக்கும் சாதாரணமாகப் புரியக் கூடியதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் ராஜினாமா கொடுத்த பிறகு கலந்து கொண்ட ஜே.ஏ.கியூ.ஹெச். நிகழ்ச்சிகள்.
ஒரு அமைப்பை அதன் தலைமையை வெறுத்து எதிர்த்து வெளியேறிவர்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்களா? அதுவும் வெளியேறிய காலத்திலேயே அந்த அமைப்பின் பெயரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்களா? அந்த அமைப்பினர்தான் கலந்து கொள்ள விடுவார்களா? வெறுத்து வெளியேறி இருந்தால் பிரச்சனை வெடித்து சூடான நிலைதான் இருக்கும். எனவே அந்தக் காலகட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. காலம் தாழ்ந்து சூடு தணியும். சூடு தணிந்த பின் தலைமையுடன் ஓரளவு சமரசம் ஏற்படும். இதற்கு பிறகு வேண்டுமானால் அதே அமைப்பின் நிகழ்ச்சியில் பேச முடியும். 27.11.1994 லேயே ஜாக்கை வெறுத்து எஸ்.கே.யை எதிர்;த்து ராஜினாமா செய்து விட்டதாக இப்பொழுது கூறும் நீங்கள் ராஜினாமா கொடுத்த பிறகு கலந்து கொண்ட ஜே.ஏ.கியூ.ஹெச். நிகழ்ச்சிகள்.
17-12-94.ல் இந்திய மதசார்பின்மை ஓர்-ஆய்வு.
18-12-94.ல் சினிமா மெட்டுகளில் மவ்லிது கட்டுகள்.
13-03-95.ல் இஸ்லாத்தில் பொருள் திரட்டும் முறையும் செலவு செய்யும் வரையும். (இஸ்லாமிய பொருளாதாரம்.)
01-07-95.ல் பொது சிவில் சட்டமும் புதுச் சதித் திட்டமும்.
23-02-96.ல் அல் குர்ஆன் ஒளியில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்.
31-08-96.ல் பொய்யான ஆன்மீகமும் போலி nஷய்குகளும்.
02-08-97.ல் நான்கு மத்ஹபுகளும் நவீன பரச்சனைகளும்.
இவை மேலப்பாளையம் ஜே.ஏ.கியூ.ஹெச். சார்பில் மட்டும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.
09-05-97.ல் பல்சமயத்தவர்கள் பங்கு கொண்ட இஸ்லாமிய கருத்தரங்கு.
21-05-98.ல் அல்-குர்ஆன் அறிவியல் உலகில் ஓர் அற்புதம்.
இவை கடையநல்லூர். ஜே.ஏ.கியூ.ஹெச். சார்பில் நடந்த நிகழ்ச்சிகளாகும்.
எதனால் எதிர்க்கிறார்கள்? (உடன்குடி 28-01-95.)
குர்ஆன் கூறும் மனித நேயம். (நாகூர் 29.04.95.)
குற்றச் சாட்டுகளும்- பதில்களும். (கோவை 26-01-96.)
மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம். (கோட்டாறு. 31-03-96.)
மாற்றுமத நண்பர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம்(சன்டிவி வீரபாண்டியன் கலந்து கொண்ட திருவல்லிக்கேணி நிகழ்ச்சி 11-05-97.)
இது மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஜாக் சார்பில் நடந்த தவ்ஹீது பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்ட பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே போகும்.
இவை யாவும் 1994 ல் நீங்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் உளப்பூர்வமானது அல்ல ஒரு நாடகம் தான் என்பதற்கும், எஸ்.கே. கூறுவது போல் உங்களை காத்துக் கொள்ள நீங்கள் த.மு.மு.க.வில் போய் சேர்ந்த பின் உங்களால்தான் பிரச்சனை என்பதற்கும். பொது மக்கள் எல்லோரும் புரியும்படியான தெளிவான ஆதாரங்களாகும்.
இதுதான் முஸ்லிம் முன்னணி செய்து வந்த பணி.
நீங்கள் ராஜினாமா கொடுத்த போது முஸ்லிம் முன்னணி இருந்தது. எப்படி இருந்தது. முறையாகத் துவங்காமல் வால் போஸ்ட்டர் இயக்கமாகவே இருந்தது. தடாக் கைதிகள், குறிப்பாக கோவை-பாஷh கோர்ட்டில் ஹாஜராகும் போதெல்லாம், ஹாஜி கோவை பாஷh பாய் இன்ன தேதியில் இன்ன கோர்ட்டில் ஹாஜராகிறார், என்று முஸ்லிம்-முன்னணி பெயரில் சென்னையில் மட்டும் வால்போஸ்ட்டர்கள் மிளிரும். இதுதான் முஸ்லிம் முன்னணி செய்து வந்த பணி. பிறகு பல்வேறு பெயர்கள் ஆலோசனையில் இருந்தது.
அப்பொழுதெல்லாம் பாஷh பாயைத் தலைவராகக் காட்ட அமைப்பு துவங்க வேண்டும். பெரிய மக்கள் சக்தி அவர் பின்னால் இருப்பதாக காட்டினால்தான். தடாவில் இருந்து அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார். இந்த நோக்கத்தில்தான் அப்பொழுது புதிய அமைப்பு காண வேண்டும் என்று நீங்கள் கூறிக் கொண்டிருந்தீர்கள். 05-3-1995-அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம் பேரவை என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. அதில் அப்பொழுது அல்-முபீன் ஆசிரியராக இருந்த கே.எம்.முஹம்மதுமைதீன் உலவி முஸ்லிம் பேரவை கன்வீனராக ஆக்கப்பட்டார். கன்வீனரான அவர், 26-03-95 அன்று முஸ்லிம் பேரவைக் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். அதில் முஸ்லிம் பேரவை தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
ஜாக்கை வெறுத்தோ எஸ்.கே.யை எதிர்த்தோ நீங்கள் ராஜினாமா செய்யவில்லை.
நீங்கள் முஸ்லிம் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் 2 அமீர் பிரச்சனை வருகிறது. ஏற்கனவே 'ஜாக்' என்ற அமைப்பில் கமாலுத்தீன் மதனியை அமீராகக் கொண்டு இருக்கிறோம். அது இருக்கவே இன்னொரு அமைப்பு கண்டு அதற்கு பி.ஜே. தலைவர் என்பது எப்படி சரியாகும்? என்ற வாதம் வருகிறது. இந்த வாதத்தைக் கொண்டு வந்தது யார்? தாருல் ஹதீஸ், தவ்ஹீது பிரச்சாரக்குழு, இஸ்லாமிய கல்விச் சங்கம். இப்படி அவ்வப்போது தேவைக்கு தகுந்தவாரெல்லாம் அமைப்புகள் உருவாக்கி அதன் தலைவராக ஆக்கப்பட்டிருந்த ஹாமித் பக்ரிதான் கொண்டுவந்தார். அதனால் நீங்கள் தலைவர் பதவியை விட்டு விடுவதாகக் கூறினீர்கள். ஜாக்குக்காக தலைவர் பதவியை விடுவது தெரியக் கூடாது என்பதற்காக அதற்கும் ஒரு டிராமா போட்டுத்தான் முஸ்லிம் பேரவைத் தலைவர் பதவியை விட்டீர்கள். இந்த நிகழ்ச்சியும் ஜாக்கை வெறுத்தோ எஸ்.கே.யை எதிர்த்தோ நீங்கள் ராஜினாமா செய்யவில்லை என்பதற்கு உரிய ஆதாரமாகும். இது மட்டுமா?
1994 லேயே ஜாக்கை வெறுத்து ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறிய நீங்கள் 15.01.1995ல் நடந்த ஜாக் மாநில செயற்குழுவில் கலந்து கொண்டீர்கள்.
21.01.1995ல் ஜே.ஏ.கி யூ.ஹெச்.ன் சார்பில் எஸ்.கே.தலைமையில் நடந்த திருக்குர்ஆன் விளக்க மாநாட்டில் கலந்து கொண்டீர்கள்.
22.01.1995 மாலை எஸ்.கே.தலைமையில் நடந்த தடா எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டீர்கள்.
அன்று இரவு அ.திமு.க தி.மு.க. ம.தி.மு.க. என சர்வகட்சியினர் எஸ்.கே. தலைமையில் கலந்து கொண்ட மனித நேய கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள்.
ராஜினாமா செய்ததாக பொய் கூறி இருக்கிறீர்கள்.
இப்படி தமிழ்நாடு முழுவதும் ஜாக் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நீங்கள். கமாலுத்தீன் மதனியை பப்ளிஷராகக் கொண்டு மக்களால் ஜே.ஏ.கியூ.ஹெச்.ன் மாத இதழ் என்று அறியப்பட்ட அல் ஜன்னத்தின் ஆசிரியராக 1998 முடிய இருந்தீர்கள். இப்படி எல்லோரும் புரியும்படியான தெளிவான ஆதாரங்கள் இருக்கவேதான், 1994 லேயே ஜாக்கும் எஸ்.கே.ன் போக்கும் சரியில்லை என்று எதிர்த்து ராஜினாமா செய்ததாக பொய் கூறி இருக்கிறீர்கள். இப்படி கூறிய நீங்கள்தான் எஸ்.கே.யை பொய் சொல்லக் கூடியவர் என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
இப்பொழுது கூறியுள்ள காரணம் பொய் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.
உங்களை காத்துக் கொள்ள நீங்கள் த.மு.மு.க.வில் போய் சேர்ந்த பின் உங்களால்தான் பிரச்சனை என்று கூறியதால் எஸ்.கே.மீது புளுதி வாரி வீசி 'ஜாக்' சரி இல்லை என்று வெளியேறியதாக இப்பொழுது கூறி உள்ளீர்கள். த.மு.மு.க துவங்கிய பின் த.மு.மு.க வின் நகர, மாவட்ட எல்லாக் கிளைகளின் தலைமைப் பொறுப்புகளை 'ஜாக்'கில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என்று எஸ்.கே. இடம் நீங்கள் வேண்டுகோள் வைத்தீர்களா இல்லையா? முடியாது என்று மறுத்தவர் .எஸ்.கே.தானே. இதுவும் நீங்கள் ராஜினாமாவுக்கு இப்பொழுது கூறியுள்ள காரணம் பொய் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.
ஜே.ஏ.கியூ. ஹெச்-ன் அரசியல் பிரிவாக த.மு.மு.க வை அங்கீகரியுங்கள்.
த.மு.மு.க துவங்கி ஓர் ஆண்டுக்குப்பின் த.மு.மு.க. தமிழக அளவில் மட்டுமல்ல, தமிழ் கூறும் முஸ்லிம் உலக அளவில் ஜே!ஜே! என்று இருந்தது. அப்பொழுது 27.08.1996 அன்று நீங்கள் எஸ்.கே.இடம் இப்பொழுதே குணங்குடி-ஹனிபா, ஜவாஹிருல்லாஹ், ஹைதர், நிசார்-அஹ்மது ஆகியவர்களை கூட்டி வருகிறேன். உங்களிடம் 'பைஅத்' செய்யச் சொல்கிறேன். ஜாக்குக்கு கட்டுப்பட்டவர்களாக, உங்களை அமீராக ஏற்று நாங்கள் செயல்படுவோம். ஜே.ஏ.கியூ. ஹெச்-ன் அரசியல் பிரிவாக த.மு.மு.க வை அங்கீகரியுங்கள் என்று நீங்கள் கோரிக்கை வைக்கவில்லையா?
இப்பொழுது கூறியுள்ள காரணம் மிகத் தெளிவாகவே பொய் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.
இதையும் ஏற்க மறுத்தவர் எஸ்.கே.தானே. இது உங்களைப் போன்ற மவுலவிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அதனால் மறுக்க முற்பட்டால், இதற்கு உரிய ஆதாரங்களைக் கொண்டு வருவேன். இதை பொய் என்று வாதித்தால் நீங்களும் கூட்டமைப்பு மவுலவிகளும் முபாஹலா பண்ண வேண்டும். நீங்கள் வெளியிட்ட செட்டப் கேஸட்டில் கூறி உள்ளது போல். ஜாக்'கும் எஸ்.கே. தலைமையும் வேண்டாம் என்று ராஜினாமா கொடுத்து வெளியேறி இருந்தால், இப்படி 'பைஅத்' செய்ய நீங்கள் முன் வந்திருப்பீர்களா? இதுவும் நீங்கள் ராஜினாமாவுக்கு இப்பொழுது கூறியுள்ள காரணம் மிகத் தெளிவாகவே பொய் என்பதற்கு உரிய ஆதாரமாகும்.
உங்களை எளிதில் கைது செய்து விடக் கூடாது என்பதற்காக.
''பாக்கரைப் போல் மற்றவர்களையும் கைது செய்து விடக் கூடாது என்பதற்காக 1995 ஆகஸ்டில் த.மு.மு.க. பெயரால் (முதல்) போராட்டம் நடத்தத முடிவு செய்த நீங்கள். உங்கள் பெயராலோ அல்லது குணங்குடி-ஹனிபா, அலாவுதீன், கலீல் ரசூல், லுஹா பெயராலோ அழைப்பு கொடுக்கவில்லை. அன்று உங்களில் யார் பெயரில் அழைப்பு கொடுத்தாலும் ஒரு ஈ, காக்கை கூட வராது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே உங்கள் பெயரால் அழைப்பு கொடுக்காமல், கமாலுத்தீன் மதனி பெயரால் நீங்களே அறிக்கை எழுதி, அச்சிட்டு அவர் வெளியிடுவது போல் ஜாக் பெயரில் வெளியிட்டீர்கள். உங்கள் பெயரால் அழைப்பு கொடுத்து இருந்தால் அன்றே நீங்கள் முஸ்லிம்களால் அடையாளம் காணப்பட்டு இருப்பீர்கள். பாக்கரைப் போல் உங்களை எளிதில் கைது செய்து விடக் கூடாது என்பதற்காக உங்களுக்கு அமைப்பாளர் பொறுப்பும் பொறுப்பும் போடப்பட்டது.
தவ்ஹீது வாதிகள் அன்று குணங்குடி ஹனீபா தலைமையை ஏற்றது சரியா?
இந்த உண்மையை மறைக்க ''தவ்ஹீது வாதிகள் ஷpர்;க் வாதிகளின் தலைமையில் போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் த.மு.மு.க. ஆரம்மித்தோம். அந்தக் கட்டத்தில் ஆரம்மிக்கவில்லை என்றால், தவ்ஹீது வாதிகள் ஷpர்க் வாதிகளின் பக்கம் போயிருப்பார்கள்.'' தவ்ஹீதுவாதிகளை ஏமாற்ற இப்படி சமாளித்தும் விளக்கம் கூறி உள்ளீர்கள். குணங்குடி ஹனீபா யார்? அவர் இப்பொழுது தவ்ஹீதுவாதி என்பது தனி விஷயம். உங்கள் கூற்றுப்படி தவ்ஹீது வாதிகள் அன்று குணங்குடி ஹனீபா தலைமையை ஏற்றது சரியா?
ஷpர்க் என்று எழுதுவது ஊருக்கு உபதேசிக்கத்தானா?
இப்படிக் கேட்டால் குணங்குடி ஹனீபா தவ்ஹீது வாதிதான் பி.ஜே.தான் அவரை விரல் அசைக்க வேண்டாம் நெஞ்சில் கை கட்ட வேண்டாம் சுன்னத்; ஜமாஅத் மாதிரி இருங்கள் என்று கூறி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். சுன்னத்திற்கு மாற்றமாக 4 இமாம்கள் என்ன ஸஹாபாக்களே கூறி இருந்தாலும் ஏற்கக் கூடாது என்று கூறுவோர், இங்கு உங்கள் அனுமதியை ஏற்பது ஏன்? பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக ஒரு செயலை செய்வதும் பிறர் பார்க்கிறார்கள் என்பதற்காக ஒரு செயலை விடுவதும் ஷpர்க் என்று எழுதுவது ஊருக்கு உபதேசிக்கத்தானா?
நீங்க இந்த மாதிரி ஈடுபாடுறதுலே திருப்தி இல்லேன்னு கேள்வி பட்டதும்...
''அரசியல் அமைப்பு ஆரம்பிக்கனும் என்ற ஒரு முடிவை எடுத்துக்கிட்டு அதே நேரத்திலே ஒரு தலைமையின் கீழே இருக்கிறோமே, ஜாக்குன்னு ஒரு அமீருக்கு கீழே இருக்கிறோமே. 2 அமீர் 3 அமீர்ன்லாம் ஒரு பித்னா வந்து விடக்கூடாதே அதற்காக வேண்டி அமீர் சாஹிப் இடத்திலும் அது சம்பந்தமாக பேசினோம். நானும் ஹாமீத் பக்ரியும் மதுரையில் உள்ள அண்ணா பஸ்ட்டாண்ட்டில் உள்ள பள்ளிவாசலில் வைத்து .. பல காரண காரியங்கள் சொல்லும் போது.... ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை.
உங்களால் தூண்டி விடப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் அல்லவா?.
இதற்குப் பிறகும் அமீர் சாஹிப் இதில் அதிருப்தியாக இருக்கிறாங்க என்று, நீங்க இந்த மாதிரி ஈடுபாடுறதுலே திருப்தி இல்லேன்னு கேள்வி பட்டதும்... அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியையும் மைதீன் உலவியையும் அனுப்பி விட்டோம் அவர்களிடம். என்ன சொன்னாங்கன்னா ..தேவையற்ற பிரச்சனை எல்லாம் ஏற்படும்.. சங்கடங்கள் ஏற்படும் வழக்கு வம்பு தும்பு இதுக்கெல்லாம் காரணம் காட்டி அதானலதான்னு சொல்லி இருக்கிறாங்க. பிரச்சனை சங்கடங்கள் வழக்கு வம்பு ஜெயிலுக்கு போறதுதானே நாமல்லே சந்திக்கப் போறோம்னுட்டு ஈடுபட்டோம்.'' என்றீர்கள் அன்று. இன்று ஜெயிலையும் வழக்கு வம்புகளையும் சந்தித்துக் கொண்டிருப்பது நீங்களல்ல. உங்களால் தூண்டி விடப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் அல்லவா?.
உங்கள் வாக்கு மூலம் தெளிவாக்கி விட்டது.
ராஜினாமாவுக்கான உண்மைக் காரணத்தை 38 மவுலவிகளுக்கு முன் இப்படி தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறீர்கள். ஆக ராஜினாமாவுக்கான காரணம் தெளிவாகி விட்டது. ஜாக்கை வெறுத்தோ கமாலுத்தீன் மதனியின் போக்கை எதிர்த்தோ வெளி வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டு விட்டது. பிரச்சனைக்கான காரணம் பி.ஜே. தான் என்பதும் தெளிவாகி விட்டது. என்ன பிரச்சனை? ஜாக்கை விட மக்கள் சக்தி மிக்க அமைப்பாக ஆகிவிட்ட த.மு.மு.க. தலைமை தானாக முன் வந்து உங்களுக்கு கீழ் நாங்கள், என்று பைஅத் செய்ய முன் வந்த போதும், எஸ்.கே. ஏற்க மறுத்தது ஏன்? என்பதை உங்கள் வாக்கு மூலம் தெளிவாக்கி விட்டது.
1994 லேயே ராஜினாமா செய்ததாக கூறியுள்ளது எவ்வளவு பெரிய பொய்.
இப்படியே தொடரும் அந்த உச்சகட்ட கிளைமாக்ஸ் உரையிலும் அதற்கு முன்னும் பின்னும் மூச்சுக்கு முன்னூறு தடவை (என்பார்களே அது போல) அமீர் அமீர் என்று அல்ல. இன்னும் மரியாதையாக அமீர் சாஹிப் அமீர் சாஹிப் என்று அதாவது சாஹிப் என்ற உயர் கண்ணிய வார்த்தையையும் சேர்த்தே சொல்கிறீர்கள். எஸ்.கேயை பொய்யராக சித்தரிக்கும் நீங்கள் ஜாக்கை வெறுத்து எஸ்.கேயை எதிர்த்து 1994 லேயே ராஜினாமா செய்ததாக கூறியுள்ளது எவ்வளவு பெரிய பொய். இப்படிப்பட்ட நீங்கள்தான் எஸ்.கேயை பொய் சொல்லக் கூடியவர் என்று கூறுகிறீர்கள்.
விரைவில் அடையாளம் காணப்படுவீர்கள்.
நீங்கள் மனதால் கட்டுப்பட்டவராகத்தான், எஸ்.கே.யை அமீராhக ஏற்ற நிலையில்தான், ஜாக்தான் தவ்ஹீதுவாதிகளுக்கு உரிய அமைப்பு என்ற உறுதியுடன்தான் எதிர்ப்பு டிராமா போட்டீர்கள். புலி வருகிறது, புலி வருகிறது கதையாக விளையாட்டு வினையானது போல். உங்களின் டிராமாவை சுய நலத்துக்காக உங்கள் சுய லாபத்திற்காக உண்மையாக்கி தவ்ஹீது ஜமாஅத்தை மோசம் பண்ணி விட்டீர்கள். உங்களுக்கு கிடைத்த எதிர் பாரா இலாபங்களால் மயங்கி ஐக்கியமாகி விட்டீர்கள் இந்த உண்கைளை தொடர்ந்து மூடி மறைத்தால். விரைவில் அடையாளம் காணப்படுவீர்கள்.
உங்கள் மூலம் Nஷர்ப் புகழ்-அன்வர் இடம் Nஷர் சேர்ந்தார்.
ஹை கிரிப் டயர் கம்பெனி பற்றியும் கூறி உள்ளீர்கள். அதுவும் எஸ்.கே.யால் மூடப்பட்ட மாதிரி கூறி உள்ளீர்கள். நீங்கள் குற்றம் சாட்டி உள்ள காரைக்கால் ஹை கிரிப் டயர் பேக்ட்ரி பங்கு தாரர்களில் நானும் ஒருவன். என்னைப் பாட்னராகச் சேரச் சொன்னதும்; எஸ்.கே.யை பாட்னராகச் சேரச் சொன்னதும் ஜே.ஏ.கியூ.ஹெச்.ல் இருந்தும் முதலீடு போடச் சொன்னதும் நீங்கள்தான். துபையில் போய் என்னை Nஷர் சேர்க்கும் படியும் சொன்னீர்கள். அதன்படி முயற்சி செய்தேன். Nஷர் சேரவில்லை. இது உங்கள் முயற்சிதான் என்பது அப்பொழுது நான் Nஷர் கேட்ட பொதக்குடி அப்துல்ஸமது, சுஜாவுத்தீன் போன்ற பழைய ஐ.ஏ.ஸி. சகோதரர்களுக்குத் தெரியும். டயர் கம்பெனிக்கு Nஷர் சேர்க்க செய்த முயற்சியில்தான் பொதக்குடி அப்துல்ஸமது உங்கள் மூலம் Nஷர்ப் புகழ்-அன்வர் இடம் Nஷர் சேர்ந்தார். அதுவும் பிரச்சனையாக இருந்தது. இந்த பிரச்சனை சம்பந்தமாக பொதக்குடி அப்துல் ஸமதுக்காக நானும் உங்களிடம் பல முறை பேசி இருக்கிறேன்.
நீங்கள் போடும் பழியைத்தான் நம்புவார்கள்.
எதையுமே பின்னாலிருந்து இயக்கி விட்டு நற்பெயர் வந்தால் பெற்றுக் கொள்வதும். கெட்ட பெயர் வந்தால் பினாமி தலையில் கட்டுவதும் போன்ற பழக்கமுடைய நீங்கள், இதில் தங்களது பினாமிகளைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில் எஸ்.கே.மீது பழி போட்டுள்ளீர்கள். பேக்டரிக்கு எஸ்.கே.தான் பொறுப்பாளி மாதிரியும் கேட்டால் மறுப்பதற்கு ஏற்றவாறும் இரண்டு பொருள்படக் கூறி உள்ளீர்கள். அதில் ''ஹைகிரிப் டயர் கம்பெனி போட்டோம்'' என்று முதலில் உண்மையைக் கூறி விடுகிறீர்கள். பிறகு போட்டாங்க என்று திசை திருப்பி, அதில் கமாலுத்தீன் ஜாக்குடைய பணம் எல்லாம் இருக்கு என்று சமாளிக்கிறீர்கள். இதைப்பற்றி விபரம் தெரியாதவர்கள் சாதாரணமாக பார்ப்பவர்கள் எஸ்.கே.மீது நீங்கள் போடும் பழியைத்தான் நம்புவார்கள். அதில் அவர் மச்சானை நிர்வாகியாகப் போட்டார் என்று கூறி. அவர் செய்த மானக்கேடான செயலால் நஷ;டம் ஆனதாக குற்றம் சாட்டுகிறீர்கள்.
ஹைகிரிப் டயர் கம்பெனியின் உங்கள் பினாமி.
வாதத்திற்காக நீங்கள் Nஷர் சேர்த்துவிட்டு எஸ்.கே.பொறுப்பில் இருந்ததாக வைத்துக் கொள்வோம். அப்பொழுதும் ஷபொய்யர் என்ற பட்டத்தை யார் தட்டிச் செல்கிறார் என்று பாருங்கள். நீங்கள் ஷNஷர் சேர்த்து விட்டதாகக் கூறுகிறீர்களே அது ராஜினாமாவுக்கு முன்பா- பின்பா? ஷNஷர்கள் யாவும் நீங்கள் கூறும் ராஜினாமாவுக்குப் பிறகுதான் சேர்த்தீர்கள். எஸ்.கே. சேர்ந்தது, ஜாக் சார்பாக சேர்த்தது, நான் சேர்ந்தது யாவும் ஒரே கால கட்டத்தில்தான். குறிப்பாக நான் முதல் தடவை பணம் கொடுத்தது 1995 ஜனவரியில் ஜாக் தடா எதிர்ப்பு பேரணி நடத்திய அன்றுதான். எங்களுக்கு Nஷர் பத்திரம் தரப்பட்ட நாள் 21.03.1995. Nஷர் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பவர் ஹைகிரிப் டயர் கம்பெனியின் உங்கள் பினாமி சேர்மன் மவுலவி ஜே.எஸ்.ரிபாய்.
பொய் குற்றச் சாட்டு கூறியுள்ளீர்கள்.
என்னிடம் முதலில் பணம் வாங்கிச் சென்றவர் வேர்க்கிளம்பி ஹக்கீம். என்னை ஷNஷர் சேரச் சொன்னபொழுது மேலப்பாளையம் மவுலவி ஜே.எஸ்.ரிபாயி, வேர்க்கிளம்பி ஹக்கீம், மேனேஜிங் டைரக்டர் இஸ்ஹாக் மரைக்காயர் மகன் காரைக்கால் கபீர் ஆகிய மூன்று பேரைத்தான். நீங்கள் என்னிடம் பொறுப்பு தாரிகளாக காட்டினீர்கள். இப்பொழுது எஸ்.கே.மச்சான் பிரச்சனையால் காரைக்கால் டயர் பேக்டரி மூடப்பட்டதாக பொய் குற்றச் சாட்டு கூறியுள்ளீர்கள்.
யாருக்குமே போட்ட முதல் கிடைக்கவில்லை.
1995 ஜனவரியில் ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்து டயர் பேக்டரி பங்கு தாரராக சேர்ந்த நான். 2 வது தடவையாக (அதாவது 2 வது தவணையாக அல்ல 2 வது தடவையாக) மேலும் ரூபாய் 50 ஆயிரம் உங்கள் வேண்டுகோள்படிதான் கொடுத்தேன். இதற்குப் பிறகு குறுகிய காலத்தில் மூடப்பட்ட தகவல் வருகிறது. மதுரையில் இருந்த உங்களிடம் போன் போட்டுக் கேட்டேன். மூடப்பட்டதற்கு அன்று நீங்கள் என்னிடம் சொல்லியக் காரணம் இது அல்ல. எது எப்படியோ எனக்கு பணம் கிடைக்கவில்லை. 'ஜாக்'குக்கு கிடைக்கவில்லை. எஸ்.கே.க்கு கிடைக்கவில்லை. யாருக்குமே கிடைக்கவில்லை என்று நீங்களே தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். யாருக்குமே போட்ட முதல் கிடைக்கவில்லை.
ஷம்சுல் லுஹா மறுத்தால், முபாஹலா மேடையில் சந்திக்கத் தயார்.
திருச்சி எ.ஜி.முஹம்மது காரைக்காலில் எஸ்.கே.மச்சான் பற்றியும் குற்றச் சாட்டுக் கூறுகிறீர்கள். குற்றச் சாட்டுக்களை கூறுவதற்கும் தகுதி வேண்டும். ஒரு விரலால் எதிர் தரப்பை சுட்டிக்காட்டினால் மற்ற மூன்று விரல்களும் உன்னைச் சுட்டி காட்டுகின்றன. இந்தச் சொல் மொழி இங்கே செயல் மொழியாகிறது. இது மாதிரி குற்றச் சாட்டுக்கள் கூறுவதற்கு உங்களுக்குத் தகுதி இல்லை என்பதே நான் ஷம்சுல் லுஹா மூலம் அறிந்த உண்மையாகும். மதுரை மாநாட்டில் பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் கண்காட்சிப் பகுதியிலேயே நீங்கள் நின்றது பற்றி இன்று உங்களுடன் இருக்கும் மவுலவிகள் செய்த ... விமர்சனங்களை எம்மிடம் கூறிய ஷம்சுல் லுஹா மறுத்தால், முபாஹலா மேடையில் சந்திக்கத் தயார்.
உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களுடன் இருக்கும் மவுலவிகளால் விமர்சிக்கப்படும் உங்களின் கூற்று உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளை முன்பு நம்பி இருந்தேன். நீங்கள் உட்பட உங்களுடன் உள்ள மவுலவிகளின் தெளிவான பொய்களையும் பொய் சத்தியத்தையும் அறிந்த பின் மற்றவர்களின் சத்தியத்தை நம்ப முடியவில்லை. உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
வியாபாரத்திற்காக விளம்பரம் போடுவதுதான் உங்கள் நீதியா?
குறிப்பிட்ட ஊர் அளவில் கூட பிரபல்யம் இல்லாதவர், குறிப்பிட்ட மாவட்ட அளவில் பிரபல்யமானவர். இப்படி 2 பேர் தனித்த நிலையில் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறுகிறீர்கள். அதே நேரத்தில் மாநில அளவில் மட்டும் அல்ல தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் பிரபல்யமான பிரமுகர்கள். அது மாதிரி தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் பிரபல்யமான ஒரு பொது நிறுவனத்தில் செய்த ஒழுக்கக் கேட்டிற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? இது பற்றி பக்கம் பக்கமாக எழுதிய லுஹாவை விடுங்கள். உங்கள் நிலை என்ன? நீதின்னா சுபஹானல்லாஹ் அந்த மாதிரி நீதின்னு வியாபாரத்திற்காக விளம்பரம் போடுவதுதான் உங்கள் நீதியா?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.