ஒழுக்கக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹாவோ.

மேலப்பாளையம் காந்திலைட் பூலி ஷம்சுல்லுஹா அவர்களுக்கு கா.அ.மு. எழுதும் பதில். கடந்த ரமழான் மாதம் 2003ல் பயான் செய்யும் வேலைக்கு துபை வந்திருந்தீர்கள். 

அப்பொழுது 2001 ல் பி.ஜே. பற்றி நீங்கள் என்னிடம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாக இருந்தவர்களையும் அல் இர்ஷாத் பெண்கள் கல்லூரியில் நடந்தவைகளுக்குள்ள சாட்சிகளையும் அழைத்துக் கொண்டு உங்கள் ரூமுக்கு வந்தேன். நான் சாட்சிகளுடன் வீடியோ கேமராவையும் எடுத்துக் கொண்டு வந்தேன். இதை அறிந்ததும் ரூமை விட்டு ஓடினீர்கள்.


பலர் பழ்லுல் இலாஹியை நேரில் சந்தித்துப் பேசுங்கள் என்றதற்கு இங்கும் பேச மாட்டேன் ஊரிலும் பேச மாட்டேன் மறுமையில்தான் சந்திப்பேன் என்று கூறி உள்ளீர்கள். அப்படி கூறிய நீங்கள், த.மு.மு.கவுக்கு நீங்கள் அளித்த விளக்கத்தின் காப்பியை எனக்கு ஏன் ஈ-மெயில் அனுப்பினீர்கள். உங்களுக்கு மறுமை வந்து விட்டதோ?


பிர்அவ்ன், அபுஜஹ்ல் வழியில் இருப்பவர்கள்.


உங்கள் கடிதத்தை அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு துவக்கவில்லை. இதன் மூலம் லுஹா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியை பின்பற்றக் கூடியவரல்ல என்று தெளிவு படுத்தி உள்ளீர்கள். நபி(ஸல்) கற்றுத் தந்த ஸலாம் சொல்லும் முறையை புறக்கணித்து மூஸா (அலை) பிர்அவ்னைப் பார்த்து கூறியதை தமிழில் எழுதி உள்ளீர்கள்.


முஃமின்கள் கண்ணாடி போன்றவர்கள்

த.மு.மு.க. தலைமை என்ற முஃமின்கள் கண்ணாடியில் உங்கள் முகம் தெரிந்துள்ளது. எனவே பிர்அவ்னை நோக்கி மூஸா(அலை) சொன்ன வார்த்தையை சொல்லி உங்களை பிர்அவ்னாக அடையாளம் காட்டி உள்ளீர்கள். த.மு.மு.க.வை எதிர்க்க பி.ஜே. அபூஜஹ்லை விட கடுமையாக எதிர்ப்பேன் என்று கூறி உள்ளார். அவருக்கு என்ன சளைத்தவரா நீங்கள் த.மு.மு.க.வை எதிர்க்க பிர்அவ்னாக இருப்பேன் என்று உணர்த்தி உள்ளீர்கள். பி.ஜேயின் வார்த்தை த.மு.மு.க. இப்பொழுது நபி வழியில் இருப்பதையும் அதை எதிர்ப்பவர்கள் அபுஜஹ்ல் வழியில் இருப்பதையும்; தெளிவு படுத்தி உள்ளது.

த.மு.மு.க. சுத்தமாகி புனிதப்பட்டுவிட்டது

நீங்கள் எழுதி உள்ள குற்றச்சாட்டுப்படி த.மு.மு.க. இவ்வளவு கெட்டுப்போய் இருக்கிறது என்று என்னை நம்ப வைக்கவா? எனக்கு காப்பி அனுப்பினீர்கள்? நான் சொல்கிறேன் த.மு.மு.க. கெட்டுப் போய் இருந்தது. உங்களைப் போன்ற கழிசடைகள் வெளியேறியதன் மூலம் அது சுத்தமாகி புனிதப்பட்டுவிட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சுயநலம் நிறைந்த லாபத்திற்காக எப்படியும் பேசுவீர்கள்.

த.மு.மு.க. என்ற அமைப்பு துவங்கும்போது ஜே.ஏ.கியூ.ஹெச். என்ற தவ்ஹீது அமைப்பில் இருந்த இளைஞர்கள்தான் அணிவகுத்து வந்தார்கள் என்று எழுதி உள்ளீர்கள். மகான் பி.ஜே. அவர்களும் ஜே.ஏ.கியூ.ஹெச். என்ற வார்த்தையை சொல்லாமல் தவ்ஹீதவாதிகளை வைத்துதான் த.மு.மு.க. வளர்ந்தது என்று இப்பொழுது திருச்சியில் சொல்லிக் காட்டி உள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை.

இந்த உண்மையை இப்பொழுது நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் நிச்சயமாக அதில் சுயநலமும் லாப நோக்கும் இருக்கிறது. உங்கள் சுய நலத்திற்காகத்தான் இப்பொழுது இந்த உண்மையை சொல்லி உள்ளீர்கள். தேவைப்பட்டால் இதைவிட கூடுதல் லாபம் கிடைத்தால் இந்த உண்மைக்கு மாற்றமாகவும் வேர்வை சிந்தி உழைத்த தவ்ஹீதுவாதிகளுக்கு பாதகமாகவும் நன்றி கெட்டத்தனமாகவும் சொல்வீர்கள். சுயநலம் நிறைந்த லாபத்திற்காக எப்படியும் பேசுவீர்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது.

தவ்ஹீதுவாதிகளுக்கு பாதகமாக த.மு.மு.க. தலைமை பேசியுள்ளதா?

இந்த உண்மைக்கு மாற்றமாகவும் வேர்வை சிந்தி உழைத்த தவ்ஹீதுவாதிகளுக்கு பாதகமாகவும் நன்றி கெட்டத்தனமாகவும் ஜவாஹிருல்லாஹ்வோ, ஹைதர் அலியோ மற்றுமுள்ள பொறுப்பாளர்களோ என்றைக்காவது சுன்னத் ஜமாஅத் மக்கள் வந்ததால்தான் நம்மால் கூட்டம் காட்ட முடிந்தது அவர்களுக்குதான் அந்த அனுபவம் உண்டு என்று சொன்னதற்கு ஏதாவது ஒரு சான்றை காட்ட முடியுமா?;.

தவ்ஹீதுவாதிகளுக்கு பாதகமாக பி.ஜே. வகையறாக்கள் பேசியுள்ளனர்.

இதே திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பி.ஜே. வகையறாக்கள் அவர்களது சுய நலத்திற்காக அப்படி கூறி இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் ஆடியோ கேசட்கள் கிடைக்கும் என்று சமீபத்தில்கூட அபூஅப்துல்லாஹ் அவர்கள் அந்நஜாத்தில் விளம்பரம் செய்திருந்தார்கள். 7 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பி.ஜே. பேசியதை அந்த ஆடியோவிலிருந்து வார்த்தை பிசகாமல் அல்ல அல்ல எழுத்து பிசகாமல் அவர் பேசிய ஸ்டைலில் அப்படியே தருகிறேன்.

இன்று சொல்வதற்கு மாற்றமாக அன்று சொன்னது.

ஒரு தவ்ஹீதுவாதிக்காகத்தான் குராபிகளைக் கொண்டு குரல் கொடுக்க வச்சோம். நல்லா விளங்கிக்கிடனும். ஒரு தவ்ஹீதுவாதி ரிபாஈக்காக குராபிகளைப் பூரா, நம்ம மட்டும் போனா ஐநூறு பேரு நிக்க மாட்டோம். மெட்ராஸ்லே அவனையும் சேர்த்ததினாலே மூவாயிரம் பேர் வர முடிஞ்சிச்சு. ஊர்வலத்திலே ஐயாயிரம் பேர் வர முடிஞ்சிச்சு. நம்ம மட்டும் போய் ரிபாஈக்கு குரல் கொடுக்க போனோம்னு சொன்னா? மெட்ராஸ்லே நாம எவ்வளவு பேர் இருந்தோம்? அவ்வளவுதான் எரநூறு(200) பேர் வருவாங்க. அதிலேயும் இந்த எரநூறு(200) பேர் வருவாங்களான்னு சொல்ல முடியாது. ஏன் இவங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் கிடையாது. அப்படி அந்த மாதிரி டிரைனிங் நாம கொடுக்கலெ. இவங்கலாவது வருவாங்க, கட்சி கிட்சி என்று போனவங்களாவது வருவாய்ங்க. அவனுடைய பலத்தையும் தவ்ஹீதவாதிகளுடைய இதற்குத்தான் பயன்படுத்துகிறோம்.

குறிப்பு: முஸ்லிம்களை தவ்ஹீதிகள் குராபிகள் என்று கூறுபோடும் வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்களை காலம் காலமாக கூறுபோட்டு குளிர் காயும் சுயநலக் கூட்டம் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதால் அவர்கள் சொன்னதை அப்படித்தான் எழுத முடியும். அந்த அடிப்படையில்தான் கூறு போடும் வார்த்தைகள் எனது பிரசுரங்களில் இடம் பெறுகின்றன.

அன்று கிடைத்த லாபம் என்ன?

முதன் முதலில் நடந்த சென்னை பேரணியையும் உண்ணாவிரதத்தையும் தவ்ஹீதவாதிகளை நம்பி இருந்தால் இருநாறு பேர் கூட வந்திருக்க மாட்டார்கள். சுன்னத் ஜமாஅத்தினரை வைத்துதான் பேரணியில் 5000 பேர் உண்ணாவிரதத்தில் 3000 பேர் கூடினார்கள். குராபிகள் பலத்தைதான் தவ்ஹீதுவாதிகளுக்கு பயன்படுத்தினோம் என்று நா கூசாமல் நன்றி கெட்டத்தனமாக பி.ஜே. அன்று சொன்னாரே ஏன்? அப்படிச் சொல்ல அன்று கிடைத்த லாபம் என்ன? எந்தக் குராபி இடம் ரகசிய கூலி வாங்கி விட்டு அப்படிப் பேசினார்.

பொய்யை சொன்ன பொய்யர்களாக ஆவது எந்த வகையறா?

இன்றைக்கு த.மு.மு.க.வை குராபிகள் கழகம் என்று எழுதி உள்ள ஷம்சுல்லுஹாவே, அந்த அமர்வில் பி.ஜேயின் உண்மைக்கு புறம்பான இந்தக் கூற்றை ஆதரித்த வண்ணம் இருந்த உங்களுக்கும் எம்.எஸ். சுலைமான்,  போன்றவர்களுக்கும் ரகசிய கூலியில் கிடைத்த பங்கு என்ன? இன்று சொல்வதுதான் உண்மை என்று வாதித்தால் அன்று சொன்னது பொய். அன்று சொன்னதுதான் உண்மை என்று வாதித்தால் இன்று சொல்வது பொய். எந்த ஒன்று பொய்யாக இருந்தாலும் அந்த பொய்யை சொன்ன பொய்யர்களாக ஆவது எந்த வகையறா? உங்கள் வகையறாக்கள்தானே!

த.மு.மு.க.வை வைத்துதான் தவ்ஹீது கொள்கை வேகமாக பரவியது.

த.மு.மு.க.வை வைத்துதான் தவ்ஹீது கொள்கை வேகமாக பரவியது என்ற உண்மையைக் கூட அடக்கத்துடன், தவ்ஹீது கூட்டம் போட முடியாத ஊர்களிளெல்லாம் த.மு.மு.க.வின் செல்வாக்கை பயன்படுத்தி கூட்டம் போடப்பட்டது| என்று இப்பொழுதுதான்  சொல்லிக் காட்டி உள்ளார்கள். அதுவும் த.மு.மு.க. தவ்ஹீது கொள்கைக்கு விரோதமானது என்று பி.ஜே. வகையறாக்கள் பொய்களை பரப்பிய பிறகுதான் சொல்லிக் காட்ட வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தவ்ஹீதுக்காக ஹைதர் அலியும் ஜவாஹிருல்லாவும் செய்த சேவைகள்.

ஆனால் 7 ஆண்டுகளுக்கு முன்பே பி.ஜே. கூறியதைப் பாருங்கள். த.மு.மு.க.வை துவக்கிய பிறகுதான் தவ்ஹீது கொள்கை வேகமாக பரவுகிறது. முன்பெல்லாம் கூட்டம் போட்டால் அந்த நூறு பேர்தான் இருப்பார்கள். இப்ப ஆயிரக்கணக்கில் திரளுகிறார்கள் என்றால் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற அறிமுகம் அவ்வளவு கூட்டத்தை கொண்டு வருகிறது. தவ்ஹீது ஜமாஅத்திற்காக ஹைதர் அலி டி.ஜி.பி. அளவில் பேசுகிறார். ஜவாஹிருல்லாவும் மேலிடம் வரை பேசுகிறார். மேலப்பாளையம் பிரச்சனையில் அரசியல் கட்சிகளின் பலத்தோடும் எம்.எல்.ஏ. என்ற அதிகாரத்தை தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிராக பிரயோகித்தபோது ஜவாஹிருல்லாஹ்தான் அதை முறியடித்தார் என்று பி.ஜே. சொல்லும்போது, ஷம்சுல்லுஹா அவர்களே, நீங்களும் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தவ்ஹீது ஜமாஅத்திற்கு செய்த சேவையை சொல்லிக் காட்டுகிறீர்கள். அந்த ஜவாஹிருல்லாஹ் இன்று உங்களுக்கு குராபி. பி.ஜேக்கு மத்ஹபுவாதி.

எந்த நாக்கைக் கொண்டு கொள்கையில் மாறுபட்டவர்களாக சித்தரிக்கிறீர்கள்.

ஜவாஹிருல்லாஹ்வை மத்ஹபுவாதி என்று சொன்னால்தான்;, உங்களை தவ்ஹீதுக்காக பாடுபடுபவர்களாக நம்பிக் கொண்டிருப்பவர்களை அவர் பின்னால போகவிடாமல் தடுக்க முடியும். இதுதானே உங்கள் வகையறாக்களின் நோக்கம். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உட்பட த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளெல்லாம் ஜாக் அமீராகிய கமாலுத்தீன் மதனி இடம் பைஅத் பண்ணி அவருக்கு கீழே த.மு.மு.கவை செயல்படுத்த தயாராக இருந்தார்கள் என்று, உங்களையெல்லாம் சாட்சிகளாக்கி பி.ஜே. கூறினாரே அப்படிப்பட்டவர்களை எந்த நாக்கைக் கொண்டு கொள்கையில் மாறுபட்டவர்களாக நீங்களும் பி.ஜேயும் சித்தரிக்கிறீர்கள். அதில் நீங்கள் அடைந்துள்ள லாபம் என்ன?

சொன்னது யார் தெரியுமா?

1997ல் நேதாஜி நகர் பள்ளியில் தவ்ஹீதுவாதிகள் பாதிக்கப்பட்டபோது ஜமாஅத்தாரை அனுகி சமாதானம் செய்து வைக்கச் சென்ற ஹைதர் அலி அவர்கள் அடிக்கப்பட்டு கார்கள் உடைக்கப்பட்டது. வழக்குகளும் அவர் மீது போடப்பட்டது. அப்பொழுது, த.மு.மு.க. பொதுவான அமைப்பு அது தவ்ஹீது கொள்கையை சார்ந்துள்ள அமைப்புபோல் உங்கள் செயல்கள் உள்ளது. த.மு.மு.க.வின் தலைமை பொறுப்பில் உள்ளவர் போனது தப்பு| என்று சொன்னது யார்? நரைத்த தவ்ஹீதவாதியான(?) பி.ஜே. அல்லவா சொன்னார்.

சிவகாசி பேச்சு பி.ஜே.ன் விருப்பப்படி உள்ளதுதான்.

தவ்ஹீதவாதியான ஹைதர் அலி சிவகாசியில் போய் த.மு.மு.க. விரல் அசைத்து விட்டு வருபவர்களின் பிரைச்சனையில் தலையிடாது, நெஞ்சில் கை கட்டுவதால் வரும் பிரச்சனையில் தலையிடாது என்று எப்படி பேசினார்? அது பி.ஜேன் விருப்பப்படிதான் பேசினார் என்பதை முன்பும் கூறி இருக்கிறேன். இப்பொழுதும் கூறுகிறேன் இதை நான் நிரூபிக்கத்தயார். பி.ஜே. மேடையில் இருக்கும்போதே பி.ஜே.ன் விருப்பப்படி இது மாதிரி ஹைதர் அலி அவர்கள் பேசி உள்ளதையும் நிரூபிக்க நான் தயார். 6-4-2002ல் பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தில் உள்ள வாசகத்தை இங்கு நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். இதோ அந்த வாசகம்.

அப்பொழுது நான் சொன்னேன், இது கூடத் தெரியாதா உங்களுக்கு?. ஹைதர் எங்கே சுயமாக சொன்னார்; அண்ணன் சொல்லித்தான் செட்டப்பு படி சொல்லி உள்ளார்
அன்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறேன். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இன்றுதான் இப்படி சொல்கிறேன் என்று நீங்கள் ஏமாற்ற முடியாது.

திட்டத்தின் மூலப்பிதா யார்?

சுன்னத் ஜமாஅத் வட்டத்தை கவர்; பண்ணனும் என்றால் தவ்ஹீது வாதிகளுக்கு எதிரானவர்கள் என்று தங்களை காட்டவேண்டும். என்று எண்ணி தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இதை பி.ஜே.ன் கவனத்திற்கு கொண்டு போனால் அவர் இதை கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் அவர்களது செயலை நியாயப் படுத்தவும் செய்கிகிறார் என்று என் வீட்டிற்கு வந்து சொன்னீர்களா இல்லையா? அப்படி என்றால் உங்கள் கூற்றுப்படி, சுன்னத் ஜமாஅத்தினரை கவர் பண்ணனும் என்பதற்காக தவ்ஹீது வாதிகளுக்கு எதிரானவர்கள் என்று தங்களை காட்டவேண்டும். என்ற திட்டத்தின் மூலப்பிதா யார்? இப்பொழுது தவ்ஹீது தவ்ஹீது என நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே. அல்லவா.

அல்முபீன் - ஏகத்துவம்

ஏகத்துவம் பத்திரிக்கை விளம்பரத்தை உணர்வில் போடாததற்கு ஜவாஹிருல்லாதான் காரணம் என்பது போல் எழுதி உள்ளீர்கள். நான் சொல்கிறேன் இதற்கு மூல காரணம் பி.ஜே.தான் என்று. தவ்ஹீதுப் பத்திரிக்கையான அல்முபீனுக்கு உணர்வில் விளம்பரம் போட வேண்டும் என்றால். அங்கே கேளுங்கள் இங்கே கேளுங்கள் என்று அலைக்கழிக்கிறார்கள்| என்று சொன்னீர்களே, அந்த அலைக்கழிப்புக்கு பின்ணணி யார் பி.ஜே. அல்லவா. இவர் ஒரு வார்த்தை சொன்னால் போடமாட்டேன் என்று சொல்வார்களா?| என்றீர்களே மறுக்க முடியுமா?

இதுதான் உங்கள் இறை அச்சமா?

சிந்தனைச் சரம் என்ற சுன்னத் ஜமாஅத் பத்திரிக்கை விளம்பரம் எப்பொழுது வந்தது 2000ல் அல்லவா. அப்பொழுது ஒரு வரி கூட என் அனுமதி இன்றி போடக் கூடாது என்று வரிக்கு வரி பார்க்கக் கூடிய ஆசிரியராக இருந்தவர் பி.ஜேதானே. மக்கள் மறதியாளர்கள் என்ற நம்பிக்கையில் இந்தச் செயலுக்கு உரியவராக ஜவாஹிருல்லாஹ்வை ஆக்கி உள்ளீர்களே. இதுதான் உங்கள் இறை அச்சமா?

தெரியாமலா இருக்கிறார் பி.ஜே.

இப்பொழுது 2 - 3வாரமாக ஒரு குராபி பத்திரிக்கையின் விளம்பரம் உணர்வில் வருகிறது. இந்த வார உணர்வில் மதுரையில் இஸ்லாமிய மாநாடு என்ற வாசகத்துடன் அந்த பத்திரிக்கையின் விளம்பரம் வந்துள்ளது. அதில் நாம் மதுரையில் நடத்திய தவ்ஹிது மாநாடு பற்றி விமர்சித்து எழுதி உள்ளது. இது குராபி பத்திரிக்கை என்று தெரியாமலா இருக்கிறார் பி.ஜே. இதனால் உங்கள் இமேஜ்தான் பாதிக்கப்படும் என்று சொன்னேன். அதற்கு பிறகு அவருக்கே உரிய பாணியில்; சன்ன பஸ்வேஸ்வரா கொள்கை உடைய பத்திரிக்கை என்று கேள்வி எழுதச் சொன்னார். கேள்வி பதில் மாதிரி அமைத்து கவனக்குறைவுக்கு வருந்துகிறோம் என்று அந்த விளம்பரத்தை நிறுத்தி உள்ளார் என்று, தலைவர் ஸைபுல்லாஹாஜா 17-9-2000 ஞாயிறு அன்று சொன்னதை மறுக்க முடியுமா?

சுன்னத் ஜமாஅத் பள்ளி விளம்பரங்களும் பி.ஜே.வரிக்கு வரி பார்க்கக் கூடிய காலத்திலும் வந்துள்ளது. பி.ஜே. தப்ஸீர் என ஒதுங்கிய பின் உணர்வு ஆசிரியர் பொறுப்பை ஜவாஹிருல்லாஹ் ஏற்ற பிறகு மட்டும் வந்துள்ள மாதிரி சித்தரித்துள்ளீர்களே அதில் உள்ள சுயநலம்தான் என்னவோ?

நீக்காமல் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினீர்கள்.

ஒழுங்கு - ஒழுக்கம் என்ற வார்த்தைகளை பயன் படுத்த தகுதி இல்லை என்ற பீடிகையுடன் உங்கள் பதிலை ஆரம்பித்திருப்பதால், அது சம்பந்தமாகவும் பார்ப்போம். நகர பொறுப்பில் இருந்தவர் சுற்றுலா சென்ற இடத்தில் அடுத்தவன் மனைவியுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. நானும் எம்.எஸ். சுலைமானும் பல முறை தலைமைக்கு தொடர்பு கொண்டு பேசினோம், ஷஅவரை நீக்காமல் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கினீர்கள்| என்று குற்றம்சாட்டி உள்ளீர்கள்.

பி.ஜே. பொறுப்பில் இருந்தால் தண்ணி அடிப்பவனும் இருக்கலாம்.

த.மு.மு.க. தீனை நிலை நாட்டுகிற அமைப்பு அல்ல. அதிலே பெர்பெக்ட்டா உள்ளவன்தான் இருப்பான்னு சொல்ல முடியாது. பலரும் இருப்பான் தண்ணி அடிக்கிறவன் இருப்பான், குடிகாரன் இருப்பான்|| என்று சொன்னது யார்? ஜவாஹிருல்லாஹ்வா? ஹைதர் அலியா? கையெழுத்து போடாமலேயே கையெழுத்து போட்டதாக வெளியிடப்பட்ட நிர்வாகிகளா? யார் சொன்னது? பி.ஜெய்னுல் ஆபிதீன் என்ற மகான் அல்லவா? எப்பொழுது சொன்னார்? அவர் அமைப்பாளராக இருக்கும்போது அல்லவா சொன்னார்.

இப்பொழுது ஒழுங்கு - ஒழுக்கம் பற்றி எழுதியுள்ள நீங்களும் எம்.எஸ். சுலைமானுடன் அந்த மேடையில் இருக்கிறீர்கள். இதற்குரிய வீடியோ ஆதாரம் மீடியா வேல்டிலும் ... இருக்கிறது. நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் பாதுகாப்புக்கும் உங்களுக்கும் மக்கள் சக்தி தேவை எனும்பொழுது அந்த அமைப்பு தீனை நிலை நாட்டுகிற அமைப்பாக இருக்க வேண்டியது இல்லை. அதில் இருப்பதற்கு நல்லொழுக்கம் தேவை இல்லை முஸ்லிம் என்று சொன்னால் போதும் என்பீர்கள்.

அல்லாஹ்வுக்காக எழுதியதா?

உங்களுக்கு அந்த அமைப்பு மூலம் நடந்து வந்த பிழைப்புக்கு எப்பொழுது ஆபத்து வருகிறது என்று கருதுகிறீர்களோ அப்பொழுது அந்த அமைப்பை தவ்ஹீதுக்கு விரோதமான அமைப்பு, ஒழுக்கம் கெட்டவர்கள் அமைப்பு என்று விமர்சித்து அதில் இருந்து வெளியேற காரணம் கற்பிப்பீர்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த நிர்வாகி சம்பந்தமான விஷயம் அல்லாஹ்வுக்காக எழுதியதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். இதை ஒட்டி பிரச்சனை பண்ணுவோம் என்று எழுதி இருப்பீர்கள். அல்லது அந்த ஆள் உங்களுக்கு எதிர் அணி ஆகி இருப்பார். இதற்கு ஆதாரமாகத்தான் உங்கள் முந்தைய செயல்பாடுகள் உள்ளன.

மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாதவர்.

நீங்கள் யார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூறி உள்ளீர்களோ அவருடன் நீங்களும் நீண்ட நெடுங்காலமாக பழகி உங்கள் தேவைக்கு பயன்படுத்தியும் வந்துள்ளீர்கள். அவர் மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாதவர். மார்க்கம் தெரியாதவர் என்பதற்காக விட்டுவிடச் சொல்லவில்லை. அது உண்மையாக இருந்தால் கண்டிக்கத் தக்கது என்பதில் மாற்று கருத்து இல்லை.

பி.ஜே. என்ற பெரிய மனிதர் சாதரணமானவரா?

மதுரை மாநாட்டில் பி.ஜே. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே கிடந்தார். மதரஸா மாணவிகளையே சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என அவரை சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று கூறினீர்கள். இது சாதாரண குற்றச்சாட்டா? கூற்றச்சாட்டு பாரதூரமானது அல்லவா. அந்த அமைப்பின் மட்டமான குழு உறுப்பினர்களில் நீங்களும் ஒருவராயிற்றே. அந்த புகாரை விசாரணை செய்ய முயற்சி செய்தீர்களா?


நீங்களிருவரும் நல்ல நோக்கத்தோடு அல்லாஹ்வின் திருப்தியை நாடித்தான் நகர நிர்வாகி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் என்பது உண்மையானால், பி.ஜே. மாநில நிர்வாகிகளில் ஒருவர் அதுவும் அமைப்பாளர் என்ற அந்தஸ்த்தில் இருந்தார். நீங்கள் குறிப்பிட்ட நகர நிர்வாகிக்கு அலிப், பே தெரியாது. பி.ஜே. என்ன ஒன்றும் தெரியாதவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு த.மு.மு.க. தலைமை நிர்வாகிகளுக்கு எழுதினீர்களா?

கணக்கு காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுத லுஹா.

தீமை நடக்கக் கண்டால் கையால் தடு...... என்ற ஹதீஸை ஊர் உலகத்திற்கு சொல்லும் நீங்கள் மாநாட்டுத் திடலிலேயே அதைக் கையால் தடுத்தீர்களா? வாயால் தடுத்தீர்களா? மனதால் வெறுத்து ஒதுங்கினீர்களா? என்ன செய்தீர்கள்? மஸ்ஜிதுர்றஹ்மான் நிர்வாகக் குழுவினர் கணக்கு கேட்டதற்கு கணக்கு காட்டாமல் நெஞ்சில் அடித்து அழுதீர்கள் என்ற செய்தி பரவியது. நெஞ்சில் அடித்து அழுத செய்தி பரவிய சில நாட்களில் பணத்திற்காக எதுவும் செய்யும் அயோக்கியன்| என்று உங்களால் விமர்சிக்கப்பட்டவர் பி.ஜே. முன்னிலையில் உங்களை தகாத வார்த்தைகள் பேசி மான பங்கப்படுத்தினார்.

கிராபிக் உலகில் உங்கள் ஆதாரத்தை நம்ப முடியுமா?

கடுமையாக பேச வேண்டும் என்றால் இன்னொரு சேனலை பயன்படுத்தும் பி.ஜேயின் ஏற்பாடுதான் இது என விளங்கிய நீங்கள், அப்பொழுதுதான் மதுரை மாநாட்டில் பி.ஜே. இப்படி நடந்து கொண்டார் என்றீர்கள். இது மாதிரி அந்த நகர நிர்வாகியாக இருந்தவர் உங்களிடம் உள்ள குறைகளை பேசி இருப்பார். உடனே உங்களுக்கு மார்க்கப் பற்று வந்து நடவடிக்கை எடுக்கும்படி எழுதி இருப்பீர்கள் என்றே கருத தோன்றுகிறது. தெளிவான ஆதாரங்களையே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து பொய்படுத்தக் கூடிய உங்கள் கூட்டத்தின் போட்டோ ஆதாரத்தை எப்படி நம்ப முடியும்? அதுவும் இந்த கிராபிக் உலகில் உங்கள் ஆதாரத்தை நம்ப முடியுமா?

பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு அபாயகரமானது.

நகர நிர்வாகியை விட பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு அபாயகரமானது. அவன் (பி.ஜே) பேசச் சென்றால் ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. அவன் இரவிலும் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியையே பார்க்கிறான்.  இப்படி பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையானால்,  இப்பொழுது நீங்கள் இருக்கும் அமைப்பு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பொதுவான நிபந்தனை

பி.ஜே. மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டை பொய்படுத்த பொய் சத்தியம் செய்வதில் வல்லவர்களான நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இல்லை என்று எளிதில் கூறி மக்களை ஏமாற்றி விடுவீர்கள். எனவே நீங்கள் மேடைகளில் பேசும் போது, நான் கூறும் குர்ஆன் ஹதீஸ் கொள்கை பொய்யாக இருக்குமானால் அல்லாஹ் என்னை நாசமாக்கட்டும்| என்று அடிக்கடி பேசுவீர்கள்.

அதுபோல மதுரை மநாட்டில் பி.ஜே. -- இப்படி நடந்து கொண்டார் என்று ஷம்சுல்லுஹாவாகிய நான் கூறி இருந்தால் அல்லாஹ் ஷம்சுல்லுஹாவாகிய என்னை நாசமாக்கட்டும் என்று துஆச் செய்து பகிரங்க அறிவிப்பு வெளியிட வேண்டும். பொது மக்களையும் அவ்வாறு துஆச் செய்யும்படி அதில் வேண்டுகோள் வைக்க வேண்டும். உங்கள் அமைப்புக்கு உட்பட்ட ஜும்ஆ உரைகளிலும் துஆச் செய்ய வேண்டும். மக்களையும் துஆச் செய்யுமாறு கூற வேண்டும். அல்லது முபாஹலாவுக்கு வர வேண்டும். நான் வைத்துள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் இதுதான் பொதுவான நிபந்தனை.

இதுதான் ஒழுக்கம் - ஒழுங்கு?

விபச்சாரத்தில் ஈடுபடுபவனை விட்டும் ஈமான் விலகி விடும் என்றால், நானும் இந்த வழியாக பல தடவை போகிறேன் எந்த தேவடியாளும் என்னை கூப்பிட மாட்டேன்கிறாளே|| என்று வெட்கத்தை விட்டு வாயால் பிறரிடம் சொன்னால் அவனது ஈமானின் நிலை என்ன? இப்படி சொல்லும்போது உங்கள் பாஷையில் பூனை குட்டி வந்து விட்டது. அதாவது அவனது உள்ளத்தில் உள்ளது வெளிப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தம். இப்படிப்பட்ட வார்த்தையை வெட்கத்தை விட்டு சொன்னவர் பூலி ஷம்சுல்லுஹாவாகிய நீங்கள் அல்லவா. இதுதூன் ஒழுக்கம் - ஒழுங்கு என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்குள்ள தகுதியோ? இதை மறுப்பதாக இருந்தால் மேலே சொன்னதுதான் நிபந்தனை.


பி.ஜே.யை கண் மூடித்தனமாக ஏற்றுக் கொண்டால் எவனும் அவர் இருக்கும் அமைப்பில் இருக்கலாம் என்ற கொள்கையில் சமரசம் செய்யாத உறுதியில்தான் வெளியேறி உள்ளீர்கள் போலும்.

விமர்சனம் யாருக்கு பொருந்தும்.

பி.ஜே. பற்றி நீங்கள் கூறியதை உறுதி செய்த பின்னரும் அதை வெளியிட்டேனா என்றால் இல்லை. சம்பந்தமில்லாமல் ஒழுக்கம் ஒழுங்கு என்று குறிப்பிட்டு ஒரு தலைமையை இழிவு படுத்த, ஷம்சுல்லுஹாவே நீங்கள் முயன்று அதை என் பார்வைக்கு அனுப்பி உள்ளதால்தான் உங்கள் விமர்சனம் யாருக்கு பொருந்தும் என்பதற்காகவே இப்பொழுது எழுதி உள்ளேன்.

தரங்கெட்டவனை ஒரிஜினல் தலைவனாக ஒப்புக் கொண்டுள்ளவர்கள் யார்? ஒழுக்கம் - ஒழுங்கு என்ற வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத தலைமை எது? இஸ்லாமிய சட்டங்களை தூக்கியெறிந்து விட்டு இயக்கம் நடத்தும் இறையச்சம் இல்லாதவர்கள் யார்? என்பதற்கு உங்கள் குற்றச்சாட்டை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

பெண்கள் கல்லூரிகளின் கதி என்ன?

உங்கள் அமைப்பின் ஒரிஜினல் தலைவர் லட்சணம் இப்படி என்றால் நீங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரிகளின் கதி என்ன? என்பதை விவரித்தால் சமுதாயம் தாங்காது. எனவே அது பற்றியும் வெளியிட்டால்தான் உங்களை கண் மூடித்தனமாக பின் பற்றுவோர் திருந்துவார்கள்.

அல் இர்ஷாத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் எம்.எஸ். சுலைமான் கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் பேசினாரா இல்லையா? ஓழுக்கத்தைப் பற்றி எழுதிய நீங்கள் உங்கள் கல்லூரியில் ஆசிரியை பணிக்கு வந்த விதவைப் பெண்ண. ஆள் கறுப்புதான் ஆனால் நல்ல எடுப்பாக இருக்கிறாள். குழந்தைகள் இருக்கின்றது. பார்த்தால் அப்படித் தெரியாது. அந்த மாதிரி உடல் என்று வேறு ஒரு ஆணிடம் வர்ணித்தீர்களா இல்லையா? புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற பெயர் வைத்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வெருண்டோடிய லுஹா| என்ற பெயரில் நான் வெளியிட்ட சி.டி.யில் அது பற்றிய விபரங்கள் உள்ளன.

ஒழுக்கத்தைப் பற்றி எழுதி உள்ள லுஹா அவர்களே, M.I. சுலைமான் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் மாணவியை முத்தமிட்டார் என்று சொன்னீர்களா இல்லையா? நீங்கள் இதைச் சொல்லவில்லை என்று மறுத்தால் மேலே சொன்ன நிபந்தனையை செயல்படுத்துங்கள். கண்டதற்கெல்லாம் முபாஹலாவுக்கு அழைக்கும் பி.ஜே. இதில் மவுனியாக இருப்பது ஏன்?

உங்கள் தம்பி ஜப்பார் சொன்ன குற்றச்சாட்டு அல்ல.

மஸ்ஜிதுர்றஹ்மானில் சிறந்த முறையில் பயான் செய்ய வேண்டும் என்றால் மற்ற அறிஞர்களின் பயான்களை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக 1998ல் உங்களுக்கு ஒரு டி.வி.யும் வி.சி.ஆரும் அனுப்பி வைத்தேன். அது மட்டுமன்றி பி.ஜே.ன் வீடியோக்களுடன் அஹ்மது தீதாத், ஜாகிர் நாயக் போன்ற அறிஞர்களின் ஏராளமான ஆங்கில வீடியோ கேசட்;களை அனுப்பித் தந்தேன். அந்த வி.சி.ஆர் ரிப்பேர் ஆனபோது அந்த ரிப்பேர் செலவுகளைக் கூட எனது கணக்கில் எழுதி இருந்தீர்கள் சந்தோஷம். எந்த நோக்கத்திற்காக அனுப்பினேனோ அந்த நோக்கம் நிறைவேறியதா? என்ன செய்தீர்கள். வீட்டில் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. இரவு ஆகி விட்டால் தொப்புல் படம் பார்க்கிறான் என்று உங்கள் தம்பி ஜப்பார் தெருவில் நின்று சப்தமாக சொன்ன குற்றச்சாட்டை இங்கே ஆதாரமாக குறிப்பிடவில்லை.

லுஹா பார்த்த பம்பரமும் ஆம்லெட்டும்;

பி.ஜே. வஹி வருவது சம்பந்தமாக அருமையான ஆய்வுரை வழங்கி உள்ளார் அந்த கேசட்டை பாருங்கள். பார்த்து மக்களுக்கு சொல்லுங்கள் என்பது போன்ற பல குறிப்புகளை போனில் சொல்லி இருக்கிறேன். பார்த்தீர்களா? சொன்னீர்களா? என்ன பார்த்தீர்கள் என்ன சொன்னீர்கள். டி.வி.யில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதற்கு உங்கள் குத்பா உரைகளே ஆதாரம்.

இரவு 11 மணி ஆகிவிட்டால் டி.வி.யில் தொடை தெரிகிறது, தொப்புல் தெரிகிறது, தொப்புலில் பம்பரம் விடுகிறான், ஆம்லெட் போடுகிறான். இதுதான் உங்கள் குத்பாவாக இருந்துள்ளது. எதைப் பார்த்தீர்களோ அதைச் சொல்லி உள்ளீர்கள். மார்க்க பயான் கேட்க தந்த டி.வி. வி.சி.ஆர்களில் மார்க்க நிகழ்ச்சிகளைவிட மற்ற நிகழ்ச்சிகளைத்தான் அதிகமாக பார்த்துள்ளீர்கள் என்றும் குற்றம் சாட்டுகிறேன். ஒழுக்கக் கேடே உந்தன் மறு பெயர்தான் ஷம்சுல்லுஹாவோ.

த.மு.மு.க. தலைமையின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு.

ஷம்சுல்லுஹா அவர்களே, நீங்கள் யாரை இழிவுபடுத்தும் நோக்குடன் எழுதி உள்ளீர்களோ அவர்கள் உங்கள் விஷயத்திலேயே பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்கள். இந்த இடத்தில் பி.ஜே. இருந்தால் இல்லாத பொய்களை சொல்வார் என்பது தனி விஷயம். இருக்கும் ஆதாரத்தை வெளியிடாமல் இருப்பாரா? நீர் பிறர் குடும்பங்களை விமர்சித்ததால் உமது குடும்பத்தின் ஒழுக்கம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி த.மு.மு.க.வுக்கு பேக்ஸ் செய்தார்களே மேலப்பாளையவாசிகள், அதை வெளியிட வேண்டிய சந்தர்ப்பம் இதுதானே. வெளியிடாமல் இருக்கிறார்களே இதுவே அவர்களின் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டு.

உள்ளத்து வார்த்தைகளா? கள்ளத்தனமான புகழ்ச்சியா?

அந்த கடிதத்தில் பி.ஜே. அவர்களைப் பற்றி வானளாவ புகழ்ந்துள்ளீர்கள். இது உங்கள் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகளா? கள்ளத்தனமான வஞ்சக புகழ்ச்சியா? இதோ பி.ஜே. அவர்கள் பற்றி நீங்கள் மனம் திறந்து அளித்த வாக்கு மூலம்.

பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவர்.

இனி பி.ஜே. முகத்தில் முழிக்கவே மாட்டேன், பி.ஜே. நான் என்ற அகம்பாவம் பிடித்தவர், எல்லோரையும் விமர்சிப்பான் அவன் செய்யும் தப்புத் தவறுகளுக்காக நியாய உணர்வு உள்ள நடு நிலையாளர்கள் யாராவது தட்டிக் கேட்டால் எதிரியாகி விடுவான். மீடியாக்கள் அவனிடம் உள்ளதால் பொய்களை துணிந்து கூறி அசிங்கப்படுத்தி விடுவான். இது அவனது இயல்பு. இதற்கு பயந்தே பெரும்பாலானவர்கள் அவன் விஷயத்தில் வாய் திறப்பதில்லை||.

ஷம்சுல்லுஹா அவர்களே பி.ஜே. அவர்களைப் பற்றி மேற்கண்டவாறு சொன்னீர்களா இல்லையா?

தொழாத காபிர்

தொழாதவனை இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் காபிர் என்கிறார். அதை எடுத்து எழுதினால் அல் முபீனில் போடுவாரோ? திருப்பி அனுப்பி விடுவாரோ? தெரியவில்லை. இவர் என்ன தப்ஸீர் எழுதுகிறார். தொழுகையில், அமல்களில் பேணுதல் இல்லாதவர். அவரோடு எந்த உறவும் கிடையாது, அவரை வைத்து ஊரில் கூட்டம் போட மாட்டேன், பக்கத்து ஊர்களுக்கு வந்தால் எடுத்துக் கட்டி போகமாட்டேன்|| என்று முடிவுரை கூறி, பி.ஜே.யை தொழாத காபிராக ஆக்கி அவர் பற்றி எவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை கூற முடியுமோ, அவ்வளவு வார்த்தைகளை கூறிய லுஹாவே இதில் எதை மறுப்பீர்கள். எதை மறுப்பதாக இருந்தாலும் நிபந்தனையை செயல்படுத்துங்கள்.

லுஹாவுக்குப் பிடிக்காத சுல்தான் ஸலஹுத்தீன் ஐயூபி வரலாறு.

சுல்தான் ஸலஹுத்தீன் ஐயூபி வரலாறு என்றாலே லுஹாவே உங்களுக்குப் பிடிக்காது. ஏன்? மஸ்ஜிதுல் அக்ஸாவை யூதர்களிடம் இருந்து மீட்ட அவரது வீர வரலாற்றை கேட்பவர்கள் வீறு கொண்டெலுந்து உங்களிடம் சிக்கி உள்ள மஸ்ஜிதுர்றஹ்மானை மீட்க வந்து விடுவார்களே என்ற பயம்தான். இதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

ஒரு தலைமையிடம் தெளிவான ஷிர்க்கை காணாதவரை அந்த தலைமையிலிருந்து வெளியேறக் கூடாது என்று ஊருக்கு உபதேசிப்பவரே. த.மு.மு.க. தலைமையிடம் கண்ட தெளிவான ஷிர்க் என்ன சொல்லுங்கள். அதற்கு ஆதாரம் இல்லை என்றால் நீங்கள்தான் இஸ்லாமிய சட்டங்களையும் இஸ்லாத்தையும் புறக்கணித்தவர் என்பது தௌ்ளத் தெளிவு. வஸ்ஸலாம். இப்படிக்கு:
கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி, 48415, ஷார்ஜா,யு.ஏ.இ.
தாயக முகவரி: 22ஏ.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு மேலப்பாளையம். 627005

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.